பரிகாரம் செய்து நடக்க இருக்கும் ஒரு கெடு பலனை மாற்றிவிட முடியுமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிகாரம் செய்து நடக்க இருக்கும் ஒரு கெடு பலனை மாற்றிவிட முடியுமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 மார்ச், 2025

பரிகாரம் செய்து விடுவதால் எதிர்மறையான பலன்கள் நடக்க இருப்பதை தவிர்த்து விட முடியுமா?



இன்று பார்த்த ஜாதகம்.

கன்னி லக்னம், மீன ராசியில் பிறந்த அந்த ஜாதகருக்கு இலக்னத்தில் அட்டமாதிபதி செவ்வாயுடன் ராகு இணைவு, ஏழில் சனியுடன் கேது  மற்றும் சந்திரன், தற்போது அந்த ஜாதகருக்கு 28 வயது முடிந்து ஒரு மாதம் 18 நாட்கள் ஆகிறது
திருமணத்திற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். இந்த வருடத்திற்குள் எப்படியாவது திருமணம் செய்து வைக்கலாம் என நினைக்கின்றோம். திருமணத்திற்கு எப்படிப்பட்ட பெண் அமையும் என்பதே  ஜாதகருடைய தந்தையின் கேள்வி..

கோட்சார ரீதியாக நாளையிலிருந்து 
(29 03-2025) ஜென்ம சனி அந்த பையனுக்கு ஆரம்பிக்க இருக்கின்றது. அதோடு நடந்து கொண்டிருப்பது அட்டமாதிபதி செவ்வாயின் பார்வையை பெற்று சனியுடன் இணைந்த கேதுவின் தசாவில், லக்னத்தில் செவ்வாயுடன் இணைந்து ராகுவின் புத்தி நடப்பில் இருக்கிறது..

இது மட்டுமின்றி அந்தப் பையனின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நீசம் பெற்றிருக்கிறார். பரிவர்த்தனை மூலமாக அவர் ஆட்சி பெற்று இருந்தாலும் ஏழாம் இடம் சனி செவ்வாய் ராகு  தொடர்பினால் அதீத பலவீனமாக இருக்கிறது.
இதோடு 11 ஆம் இடத்தை மூன்று சுபர்கள் பார்த்து வலுப்படுத்துகின்றனர்.

எப்பொழுது இலக்ன, ராசிக்கு ஏழாம் இடங்கள் பாபர்களின் தொடர்பை பெற்று ஏழாம் அதிபதியும் பலவீனமாகி 11ஆம் இடம் வலுத்திருக்கிறதோ அப்பொழுது திருமணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். இதுபோன்ற நிலைகளின் தாமதம திருமணமே பெரும்பாலும் சிறப்பு தரும். மிக விரைவில் அவசரப்பட்டு திருமண வாழ்க்கை அமைத்துக் கொள்வது கண்டிப்பாக பிரச்சினை ஏற்படுத்தி இருதார அமைப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஜென்ம சனி காலகட்டம் முடியும் வரை திருமணத்தை தவிர்த்து விடுங்கள் என்றேன்.#Iniyavan

அதோடு ஜென்ம சனி முடிந்த பிறகு, கேது தசாவில் லக்னாதிபதி புதன் களத்திரக்காரனான சுக்கிரடன் இணைந்த நிலையில் இருப்பதால், புதன் புத்தியில் திருமணம் அமைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்று கூறினேன்.


உடனே ஜாதகரின் தந்தையார் அவ்வளவு காலம் எங்களால் காத்திருக்க முடியாது. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள் பரிகாரத்தை செய்து கொண்டு திருமணத்தை நடத்திக் கொள்கிறோம் என்று கூறினார்.

தசா புத்திகள் சரியில்லாத நிலையில் எதிர்மறையான ஒரு நிகழ்வு நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, நாம் உணர்த்தும் போது அதற்காக ஒரு பரிகாரம் சொல்லுங்கள். நான் செய்து கொள்கிறேன் என்று கூறுவது சரியானது அல்ல. பரிகாரத்தால் நடக்கக்கூடிய பாதிப்பை முற்றிலுமாக பெரும்பாலும் நீக்கிவிடவே முடியாது.#Iniyavan

நீங்கள் பரிகாரம் செய்துவிட்ட  காரணமாக ஏழாம் இடத்தோடு தொடர்பு கொண்ட சனி, செவ்வாய், ராகு  போன்ற பாப கிரகங்கள் சுபர்களாக மாறி நல்ல பலன்களை தந்து விட மாட்டார்.

இயற்கை பாபர்கள் பாதிப்பை தரக்கூடிய நிலையில் இருக்கும் போது மேற்கொண்டு சுப கிரகங்களின் தொடர்பில் இருக்கும் போது மட்டும்  அவர்கள் பாதிப்பை தர மாட்டார்கள். அதை விட்டுவிட்டு ஜாதகர் பரிகாரம் செய்து விட்டால், பாப கிரகங்கள் பாதிப்பை தர மாட்டார்கள் என்பது தவறான கருத்து. கிரகங்கள் பரிகாரம் செய்தவரை ஒருவகையாகவும், பரிகாரம் செய்யாதவரை வேறு வகையாகவும் நடத்துவது கிடையாது.#Iniyavan

இதோடு அவருக்கு நடப்பில் இருக்கக்கூடிய கேது தசா எதிர்பாலின ரீதியாக ஏமாற்றங்களை தந்திருக்கும் என்று கூறிய பட்சத்தில், ஜாதகரின் தந்தை, ஆம் ஏற்கனவே என் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். கடைசியில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் ஆகிவிட்டது என்று கூறினார்.

நீங்கள் ஏற்கனவே பரிகாரத்தை செய்து அதை மாற்றி இருக்கலாமே எனக் கேட்டபோது அவர் பதில் பேசவில்லை..

அதோடு அவருடைய ஜாதகத்தில் கேது பிரிவினை,எதிர்ப்பு, வம்பு, வழக்கு போன்ற விஷயங்களை சுட்டிக்காட்ட கூடிய ஆறாம் அதிபதி  சனியின் இணைவினை பெற்று, அட்டமாதிபதி செவ்வாயின் பார்வையைப் பெற்று தசா நடத்துகின்றார். மாதாக் காரகன் என்று அழைக்கப்படக்கூடிய சந்திரனுடன்  பிரிவினையைத் தரும் ஆறாம் அதிபதி சனியுடன் இணைந்து இருக்கிறார். அது மட்டும் இன்றி, நான்காம் அதிபதி அவருடைய ஜாதகத்தில் நீசம், அதோடு சனியும் பத்தாம் பார்வையாக நான்காம் வீட்டை பார்க்கின்றார் . அட்டமாதிபதி செவ்வாயும் ராகுவுடன் இணைந்து தாய் சார்ந்த விஷயங்களை சுட்டிக்காட்டக்கூடிய நான்காம் வீட்டை, தன்னுடைய நான்காம் பார்வையால் பார்க்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
அதனால் கேது தசாவில் ஜாதகருக்கு தாய், தாய் வழி சொந்த பந்தங்கள் வழியில் விரோதம் ஏற்பட்டிருக்கும். தாயார் சார்ந்த விஷயங்கள் அவ்வளவு தூரம் இந்த கேது தசாவில் சிறப்பாக இருந்திருக்காது என்று கூறினேன். உடனே ஜாதகருடைய தந்தையார் நானும் என்னுடைய மனைவியும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். அதோடு தன்னுடைய பையன் படிக்காமல் போனதற்கு காரணமே தாயார் தான். பையனின் தாயார், பையனுக்கு படிப்பு வரவில்லை என்று சொல்லி பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பியதாக சொன்னார்.

இத்தனை விஷயங்கள் ஜாதகத்தில் தசா புத்தி ரீதியாக நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஏன் மேற்கண்ட விஷயங்களை பரிகாரம் செய்து ஏன் நல்லபடியாக மாற்றவில்லை என கேட்ட பொழுது  அவரால் மீண்டும் பதில்கூற இயலவில்லை.#Iniyavan

பரிகாரம்  பலனளிக்கும் என்பது உண்மைதான். பரிகாரங்கள் மனிதனின் மனதிற்கு  உளவியல் ரீதியாக பாதுகாப்பு தரக்கூடிய கவசம் மட்டுமே. பெரும்பாலான பரிகாரங்கள் மனதிற்கு தன்னம்பிக்கை அளிக்கக் கூடியவை. பரிகாரங்களால் தசா புத்திகள் தரக்கூடிய எதிர்மறையான விஷயங்களை அப்படியே முழுமையாக சாதகமாக்கிக் கொள்ள ஒரு காலமும் முடியாது.  நடக்கக்கூடிய தசா புத்திகள் சரியில்லாத நிலைகளில் ஒரு பாதிப்பு வரக்கூடும்  உணரக்கூடிய பட்சத்தில் அதற்காக பரிகாரம் செய்து விடுகிறேன். பரிகாரம் செய்துவிட்டு மேற்கண்ட பாதிப்புகளை தவிர்த்துக் கொள்கிறேன் என்று நினைப்பது அறிவுடைமை ஆகாது. பரிகாரம் செய்து விடுவதால் பாதிப்பை தரக்கூடிய இயற்கை பாப கிரகங்கள் தங்களுடைய இயல்பை மாற்றிக்  சுபகிரகங்களாக மாறிவிட மாட்டார்கள்.

பரிகாரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் கிரகங்கள் தங்களுக்குரிய இயல்பில்தான் இருப்பார்கள் என்பதுதான் உண்மை.

பொதுவாகவே ஏழாம் இடம் ராகு, கேதுக்களின் தொடர்பினை பெற்று பலவீனமாகி, ஏழாம் அதிபதியும் சரியில்லாத நிலைகளில் 11ஆம் பாவகம் வலுத்து இருக்கக்கூடிய பட்சத்தில் இளம் வயதில் திருமணத்தை தவிர்ப்பது நலம்.

மேலே பார்த்த ஜாதகத்தில் இந்த விதி 100 சதவீதம் பொருந்திப் போகிறது . இலக்னத்திற்கு மட்டுமின்றி, ராசிக்கு ஏழாம் இடமும் பலவீனமடைந்து ராசிக்கு 11ஆம் இடமும் வலுப்பெற்று நிலையில் இருக்கக்கூடிய ஜாதகம் இதுவாகும்.

அதோடு தற்போது நடப்பிலும் ஜென்ம சனி ஆரம்பிக்க இருக்கிறது. இத்தருணத்தில் பரிகாரம் செய்து விடுவதால் எதிர்மறையான பலனை  அவரால் மாற்றிவிட முடியும் என நினைப்பதே எதிர்மறையான விளைவுகள் நடக்கப் போவதற்கான துவக்கமே.. ஆகையால் 
இக்காலகட்டத்தை தவிர்ப்பது மட்டுமே நல்லதாகும்.#Iniyavan

 உண்மையில் வாழ்க்கையில் வரக்கூடிய சில தாமதமான நிகழ்வுகள், எதிர்கால நன்மைக்காகவே இருக்கும் என பெரியோர்கள் சொல்வது இதன் காரணமாகவே..

எப்போது திருமணம் செய்யலாம்?

2028 அக்டோபர் மாதத்திற்கு மேல் களத்திரக் காரகன் சுக்கிரன் மற்றும் ஏழாம் அதிபதி குருவுடன் இணைந்துள்ள புதன் புத்தியில் திருமணம் நடக்கும்.  அக்காலகட்டத்தில் மீன ராசிக்கு ஜென்மச் சனியும் நீங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக உங்கள் பையனுக்கு கன்னி இலக்னத்திற்கு யோகத்தை தரக்கூடிய ராஜ யோகாதிபதி சுக்கிரன்,  ஐந்தாம் இடத்தில் நின்று,  இலக்னாதிபதி புதன் இணைவினைப் பெற்ற நிலையில் சுக்கிர தசா வர இருப்பதால் உங்கள் பையனுக்கு  எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தாமத திருமணம் செய்வது மட்டுமே உங்களுடைய மகனின் ஜாதக ரீதியாக நல்ல மணவாழ்க்கையை தரும் என்று சொன்ன பிறகு அவர் ஓரளவு ஏற்றுக் கொண்டார்..

சில தாமதங்கள் நம் மனதிற்கு ஏமாற்றத்தை தரலாம். நம் மனதை அதிகப்படியான வருத்தத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் அவை எதிர்கால நன்மைக்காக அன்றி வேறொன்றும் இல்லை. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையை திசை மாற்றக் கூடிய பெரிய அளவிற்கான  பிரச்சனைகளை கண்டிப்பாக தவிர்த்து விட முடியும்.#Iniyavan 

ஒரு விஷயத்தை தள்ளிப் போடுவதால் ஏற்படக்கூடிய தாமதத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியுமே தவிர, பரிகாரத்தால் அல்ல என்பதே எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்...
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138