வக்ரம் பெற்ற கிரகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வக்ரம் பெற்ற கிரகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2022

செவ்வாய் வக்ரம் பெற்றால்

செவ்வாய் வக்ரமாக இருந்தாலும், எப்பொழுதுமே வக்ர கதியில் செயல்படும் ராகு கேதுவுடன் இணைந்திருந்தாலும் இந்தப் பதிவு பொருந்தும்..

ஒருவருடைய உத்வேகம், செயல்திறன், எதையும் வேகமாக செய்யக்கூடிய திறன் துணிவு, தைரியம், வேகம், ஆளுமை மற்றும் நிர்வாகத்திறன், மன உறுதி, தனியாக போராடும் தன்மை, உடல் பலம், சவால் விடும் திறமை, சகோதரர்கள் போன்றவற்றிற்கு காரகம் பெற்ற கிரகம் செவ்வாய் ஆவார். ஜாதகத்தில் செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது செவ்வாய் குறிக்க கூடிய மேற்கண்ட விஷயங்களில் ஜாதகருக்கு பின்னடைவுகள் இருக்கும். ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்கு இவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னரும் அதைப்பற்றி அதிகம் யோசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
ஒரு விஷயத்தை சிறப்பாக செய்வதற்கு பல்வேறு திட்டங்கள், தயாரிப்புகள் போன்றவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொண்டாலும் அவற்றை செயல்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு முன்னரே திட்டமிட்டு இருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதில் இவர்களுக்கு தயக்கம் இருக்கும்.
தனியாக நின்று செயல்படுவதில் விருப்பங்கள் இருக்காது.யாரேனும் ஒருவர் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
எதிர்ப்புகளுக்கு நிறைய பயப்படக் கூடியவர்களாக இருப்பார்கள் #Iniyavan 

ஒரு வேலைக்காக நன்கு திட்டமிட்ட பிறகும் அவற்றை செயல்படுத்தும் போது அதே விஷயத்தை (வேறு கோணத்தில்) மீண்டும் சிந்திப்பதுதான் இவர்களின் பிரச்சனையே. அதன் காரணமாகவே அச்செயலில் குழப்பம் ஏற்படுவதால் மனச்சோர்வையும், உடல்சோர்வையும் ஒருசேர சந்திக்கிறார்கள். மீண்டும் அதே செயலை செய்வதற்கு அஞ்சுகின்றார்கள். செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது ஜாதகருக்கு தைரியக் குறைவு இருப்பதற்கு வாய்ப்புண்டு. 

ஒரு கோணத்தில் பார்க்கும் பொழுது செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது ஒரு மனிதரை எந்த ஒரு செயலையும் துணிந்து செய்ய இயலாத சோம்பேறியாக மாற்றுகிறது. செவ்வாயின் இயல்பான குணங்கள் வேகம் மற்றும் சுறுசுறுப்பு, நிதானமில்லாத தன்மை. அதே செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது செவ்வாயின் குணங்கள் மந்தமாகி ஜாதகரை சோம்பேறியாக மாற்றுகிறது.
ஜாதகர் இயல்பு வாழ்க்கையில் தேவைக்கும் அதிகமான நிதானத்துடன் செயல்படுகின்றார்.
அதனால் முடிவெடுக்கும் திறனிலும் முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்துவதிலும் பின் தங்குகிறார்கள். அதே நேரத்தில் இவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் துணிந்து எடுக்க மாட்டார்கள், செயல்பட மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. முடிவெடுப்பதை பற்றியும் செயல்படுத்துவதை பற்றியும் தேவையற்று  சிந்திப்பதே இவர்களின் பிரச்சனை ஆகும்.
காலப்போக்கில் இதை அவர்கள் உணரும் போது அவருடைய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் நல்லமுறையில் மாறத் துவங்கும். அதற்கு சில காலங்கள் பிடிக்கும். #Iniyavan

பொதுவாக செவ்வாய் வக்ரமானவர்கள் அளவு கடந்து சிந்திப்பதைக் குறைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எதில் சாதிக்க விரும்புகின்றார்களோ அத்துறையில் ஏற்கனவே சாதித்தவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை குருவாக கொண்டு, அவரைப் பின்பற்றி செயல்படுதல் போதுமானது.
செவ்வாய் வக்ரமானதால் வாழ்க்கைச் செயல்பாடுகளில் பின்னடைவுகளைச் சந்திப்பவர்கள்  துடியான தெய்வங்களை வழிபட்டு வருதல் சிறப்பாகும். அனுமன் மற்றும் வாராஹி போன்ற தெய்வ வழிபாடுகள் நன்மை பயக்கும்.
மூல நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் அனுமன் சாலிசா சொல்லி வருதல், பஞ்சமி திதிகளில் வராகஹிமாலை படித்து வருவது போன்றவை நல்ல பலன்களைத் தரும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

சனி, 24 டிசம்பர், 2022

சுக்கிரன் வக்ரமாக இருந்தால்...



ஒருவருடைய திருமண வாழ்க்கை, காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன்..

பிறப்பு ஜாதகத்தில் சுக்ரன் வக்ரமாகி இருக்கக்கூடியவர்கள் மேற்கண்ட விஷயங்களை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.  சுக்கிரன் வக்ரம் பெற்ற காலத்தில் பிறந்தவர்கள் காதல், உறவுகள், அன்பு, நட்பு  இவற்றினில் ஆழ்ந்த கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். நெருக்கமான உறவகளிடத்தில் நிறைய அன்பு, காதல், எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டுவது இவர்களுக்கு கடினமாக இருக்கும். அவற்றில் பிரச்சினைகளை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். சுக்கிரனது  காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவுமுறைகளில் தங்களை மறைத்துக் கொள்வார்கள். உணர்வுகள் சார்ந்த விஷயங்களில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

ஒரு உறவினை நம்புவதற்கு அவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கலாம்.#Iniyavan
சுக்கிரனது முக்கிய காரகத்துவ விஷயமான காமத்தில் இவர்களுக்கு இயல்புக்கு மாறான விருப்பங்கள் இருக்கக்கூடும்.
இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணைய அமையாது போகலாம். வாழ்க்கைத்துணை  சம்பந்தப்பட்ட விஷயங்களில்  தங்களது அதீத எதிர்பார்ப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். சுபர் பார்வையில் இருந்தால் பலன் மாறுபட வாய்ப்பு உண்டு.

தங்களுடைய உறவுகளைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கக் கூடியவர்களாகவும், தான் சரியான நபருடன் உறவு முறையை கொண்டுள்ளோமா என்று எதிர் பாலின உறவின்  நம்பகத் தன்மையை பரிசோதிக்க கூடியவர்களாக இருப்பார்கள். சிலவேளைகளில் திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இது போன்று செயல்படுவதால் அது இவர்களின் திருமண வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. 

தங்களது ஆடம்பர வாழ்க்கை, வசதிகள் அதற்கான பண இழப்புகள் ஆகியவற்றிற்காக தொடர்ந்து கவலைப்படுகிறார்கள். உறவுமுறைகள், அன்பு,காதல்  போன்ற சுக்கிரனின் காரகத்துவ விஷயங்களில் இவர்கள் பரிபூரணத்தை (உண்மையினை) எதிர்பார்ப்பதால் அவற்றை அவ்வப்போது சந்தேகிப்பது இவர்களின் இயல்பாகவும் அமைந்து விடுகிறது. #Iniyavan
ஜாதகத்தில் சுக்கிரன் எந்த பாவகத்தில் வக்ரமாக இருக்கிறாரோ,  அந்த பாவகம் சார்ந்த விஷயங்களிலும், குறிப்பாக அந்த பாவகம் குறிக்கக் கூடிய உறவு முறையிலும் இவர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் இருக்கும்.
உதாரணத்திற்கு சுக்கிரன் ஏழாம் பாவகத்தில் வக்ரமாக இருக்கும்போது ஏழாம் பாவகம் குறிக்கக்கூடிய வாழ்க்கைத்துணை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், நண்பர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இவர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் இருக்கும். ஒருவேளை  ஐந்தாம் பாவகத்தில் வக்கிரம் பெற்ற நிலையில் இருக்கும்பொழுது குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகபடியான எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் இருக்கும்.
வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பு மேற்கண்ட பலன்களை மாற்றக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. #Iniyavan 

சுக்ரனது வக்ரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இவர்கள் பிரிந்த உறவுகளை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பதால் பிரிந்த உறவுகள் மீண்டும் இவர்கள் வாழ்வில் இணைவதற்கான வாய்ப்புகளும் உண்டு. எல்லோருக்கும்  அமைந்து விடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுக்கிரன் வக்ரம் பெற்றவர்கள் காதல், காமம், அன்பு, நட்பு போன்ற விஷயங்களில் உறவுகளிடத்தில் அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் சந்தேகங்களையும் குறைத்துக்கொள்வது நல்லது. #Iniyavan

சுக்ரன் வக்ரம் பெற்றதால் பாதிப்புகளைச் சந்திப்பவர்கள் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் ஸ்ரீ ரங்கநாதர் மற்றும்  ஶ்ரீ ரங்கநாயகி தாயாரை வழிபடுவதை வழக்கப்படுத்திக் கொள்வதும் எதிர்பாலினரிடத்தில் கன்னியமாக நடந்து கொள்வதும் நல்லதாகும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, 
MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

புதன், 21 டிசம்பர், 2022

புதன் வக்ரம் பெற்றால்




புதன் வக்ரமாக இருந்தாலும், எப்பொழுதுமே வக்ர கதியில் செயல்படும் ராகு கேதுவுடன் இணைந்திருந்தாலும் இந்தப் பதிவு பொருந்தும்..
ஒருவரது புத்திசாலித்தனம், சமயோசித புத்தி மற்றும் செயல்பாடு, தகவல் தொடர்பு கொள்ளும் திறன், வியாபார யுக்தி மற்றும் சந்தைப்படுத்தும் திறன், வணிக நடவடிக்கைகள், எதையும் தனக்கு லாபமாக மாற்றும் திறன், எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையையும் பெரிய பாதிப்பின்றி சமாளிக்கக்கூடிய திறன்,
விரைவாக முடிவெடுக்கக் கூடிய திறன், எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஜோதிடம் போன்ற மறைபொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கணிதத் திறமை, ஓவியம் போன்ற நுண்கலைகள் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றிற்கு காரகம் பெற்ற கிரகம் புதன் ஆவார். புதன் ஒருவருடைய ஜாதகத்தில் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பொழுது மேற்கண்ட குணங்களை அவரிடத்தில் காண இயலும். #Iniyavan 
இதே புதன் வக்ரமாக இருக்கும்போது மேற்கண்ட விஷயங்களில் பல படிப்பினைகளைப் பெற்ற பின்பு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடியவராக இருப்பார்கள்.
பிறப்பு ஜாதகத்தில் புதன் வக்ரமாக இருக்கும்போது தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரம்ப காலங்களில் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். தவறான தகவல்களால் பாதிக்கப்படுகிறார்கள். 
இவர்கள் சொல்வது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. பொதுவாகவே ஒரு கிரகம் வக்ரமாக இருக்கும்போது அந்த கிரகத்தின் காரகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குழப்பங்களையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்து படிப்பினைகளை தொடர்ந்து பெற்ற பின்பு அதே விஷயங்களில் நிபுணத்துவத்தை அடைவார்கள். அவர்கள் பெற்ற அனுபவத்திற்கு ஏற்ப இதன் கால அளவு மாறுபடும்.

#Iniyavan

புதன் தகவல் தொடர்பிற்கு முக்கிய காரணம் என்பதால் புதன் வக்ரம் பெற்றவர்கள், ஒரு கருத்தைச் சொல்வதில் பிறருக்கு அனுப்புவதில் முன்னர் பெற்ற இழப்புகள், தடைகள் மற்றும் குழப்பங்களாலும் பின்பு இரட்டிப்பு எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள்.சாதாரணமாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை பிறருக்கு அனுப்புவதில் கூட பலமுறை அதை சரி பார்த்த பின்பு அனுப்புவார்கள். தனக்கு வரக்கூடிய செய்தியும் சரியானதா என்பதை உறுதி செய்து கொள்வார்கள். ஏனெனில் தவறான செய்தியை பெற்றதன் மூலம் முன்னர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

வங்கியில் பிறருக்கு பணம் அனுப்புதல், Online transaction காசோலை சம்பந்தப்பட்ட விஷயங்களில்  கணக்கு எண்களை மிகுந்த கவனமாக சரிபார்த்து கொள்வார்கள்.#Iniyavan
ஒரு விஷயத்தை, இப்படித்தான் நடக்கும் என்று கணிப்பதிலும் நாளடைவில் அவர்கள் பெற்ற முன் அனுபவங்கள், படிப்பினைகள், தோல்விகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு சரியாக கணிப்பவர்கள் இவர்கள்தான்.
ஆனால் அதற்கு சில காலங்கள் பிடிக்கும் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலில் இடர்பாடுகளை சந்தித்தாலும் பின்பு அனுபவத்தின் மூலமாக மற்றவர்களை விட நடைமுறை வாழ்க்கையில் திறமையாகச் செயல்படுவார்கள்.#Iniyavan

புதன் வக்ரம் பெற்றவர்கள், தான் சொல்வதுதான்  ஆணித்தரமானது, தன்னுடைய கருத்துக்கள்தான் உண்மையானது என்று வாதாடக்கூடியவர்கள். உண்மையில் அதனை மறுக்கவும் இயலாது.
ஏனெனில் அவர்கள் சொல்லகூடிய விஷயத்தில் ஏற்கனவே தெளிவான உண்மையை அறிந்து வைத்திருப்பார்கள். அதை மறுக்கும் பட்சத்தில் அவர்களால் ஏற்க இயலாது. ஏனெனில் அதற்காக அதிக காலத்தை செலவழித்தும் இருப்பார்கள்.

 எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் தன்னுடைய பங்களிப்பிலும் சரி, தன்னுடைய லாபத்திலும் சரி எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டார்கள்.#Iniyavan

ஒரு விஷயத்தில்தான் ஈடுபடும் போது, அதில் தன்னுடைய பங்களிப்பு என்ன? தனக்கான லாபம் என்ன? என்பதிலும் மிகுந்த கவனமாக இருப்பார்கள். ஒரு கலையை கற்றுக் கொள்வதற்கு பல வழிமுறைகள், வகைகள் இருந்தாலும் அதில் தனக்கு சரியானது எதுவென்று தேர்ந்தெடுப்பதிலும் வல்லவர்கள். தேர்ந்தெடுத்த விஷயத்தில் தன்னை நிரூபித்து நிலை நிறுத்திக் கொள்வார்கள். அவர்கள் பெற்ற படிப்பினைகள் மற்றும் அனுபவங்கள் அதற்கேற்ப அதன் கால அளவு மாறுபடும்.
முன்னர் பெற்ற படிப்பினைகளும், அனுபவங்களும் இவருடைய வாழ்க்கை செயல்பாடுகளில் (புதனது காரகத்துவங்களில்) முக்கியப் பங்கு வகிக்கும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

திங்கள், 19 டிசம்பர், 2022

சனி வக்ரம் பெற்றால்



சனி வக்ரமாக இருந்தாலும், எப்பொழுதுமே வக்ர கதியில் செயல்படும் ராகு கேதுவுடன் இணைந்திருந்தாலும் இந்தப் பதிவு பொருந்தும்..

கடின உழைப்பு, தாமதங்கள், விரக்தி மற்றும் சலிப்பு, சோம்பல், தொடர் முயற்சி, பொறுத்திருத்தல்  போன்றவற்றிற்கு காரகம் பெற்ற கிரகம் சனி பகவானாவார்.
நாடி ஜோதிடத்தில் சனியைக் கர்மகாரகன் என்று அழைப்பர்.
கர்மா என்பது இங்கே தொழில் என்று பொருள்படும். நாடி ஜோதிடத்தில் சனி வைத்தே  ஒருவரின் தொழில் நிலையை நிர்ணயிப்பார்.
அந்த வகையில் ஒருவரின் தொழில், வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், பொறுப்புகள் போன்றவற்றையும் சனி குறிப்பார்.  அதோடு சனி எந்த ஒரு விஷயத்திலும் பலனைப் பெறுவதற்கான கால அளவு, அதற்கான உழைப்பு, கட்டுப்பாடுகள், வரம்புகள் போன்றவற்றை சுட்டிக்காட்டும் கிரகமாகும். பிறப்பு ஜாதகத்தில் சனி வக்ரமாக இருக்கும்போது மேற்கண்ட விஷயங்கள் அவருடைய வாழ்வில் தீவிரம் அடைகின்றன என்று அர்த்தம்.
எந்த ஒரு விஷயத்திற்கும் அதிகமான உழைப்பை தர வேண்டியிருக்கும். அதற்கான அங்கீகாரம் தாமதமாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கக்கூடும்.#Iniyavan
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த ஈடுபாடாக இருப்பார்கள். தனக்கு ஏற்ற தொழில் இது தானா என அவ்வப்போது  சந்தேகிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
சொந்த வாழ்க்கையாகட்டும், தொழிலாகட்டும், தன்னுடைய கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.ஆனால் தன்னுடைய சோம்பல் குணத்தால் இவற்றை நிறைவேற்றுவதில்  நம்மிடத்தில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து திடீரென்று சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். ஆனால் நாளடைவில் மீண்டும் சோம்பல் குணம் இவர்களைப் பற்றிக் கொள்ளவும் தாங்களே அனுமதிப்பார்கள். தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற ஈடுபாட்டை மட்டும் குறைத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் இன்று தட்டிக் கழிக்கக் கூடிய பொறுப்பு நாளை வேறு ஏதேனும் ஒரு வடிவில் நம்மையே வந்து சேரும் என்பதில் இயல்பிலேயே  தெளிவு பெற்றவர்களாக இருப்பார்கள்.ஆரம்ப காலகட்டங்களில் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய மாற்றங்கள், தடைகள்,தாமதங்கள், விரக்தியான சூழல் போன்றவற்றை சந்தித்து பின்பு, செய்துதான் ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்வார்கள்.#Iniyavan
சனி தற்பெருமை, புகழ்ச்சி போன்றவற்றிற்கு எதிரான கிரகம்,
பிறப்பு ஜாதகத்தில் சனி வக்ரம் பெற்ற நிலையில் இருக்கும்பொழுது எந்த விஷயத்தை நினைத்து பெருமை கொள்கிறார்களோ, நாளடைவில் அவர்களுக்கு எதிராக மாறும். அதை உணர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களைப் பெற்று எந்த ஒரு ஏமாற்றத்தையும் முன்கூட்டியே எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். எவரிடத்திலும் அதிகப்பற்றுடன் இருப்பது தமக்கு மன வருத்தத்தைத் தரும் என்பதை உணர்ந்தவர்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.#Iniyavan

ஆரம்ப காலகட்டங்களில் இயல்பாகச் செய்யக்கூடிய விஷயங்களில் கூட  தடை தாமதங்களை சந்தித்தாலும்,  பின்பு எந்த ஒரு விஷயத்திற்கும் தன்னுடைய இருமடங்கு உழைப்பு தேவை என்பதை உணர்ந்து உழைப்பினைத்  தருவதை வழக்கப்படுத்திக் கொண்டு, தடை தாமதமின்றி எதையும் சாதித்துக் காட்டுவார்கள். #Iniyavan
ஆனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், சனி என்பவர் கடின உழைப்பு,தொடர் முயற்சி, நீண்ட காலப் பொறுமை  போன்றவற்றிற்கு காரணமான கிரகம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும், கடின உழைப்பு மற்றும் தொடர் முயற்சியைத் தரவேண்டும். 
தருவார்கள்.. சாதிப்பார்கள்....#Iniyavan
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

குரு வக்ரம் பெற்றால்?



குழந்தைகள், தனம், மத நம்பிக்கைகள், ஆன்மீக விஷயங்கள், நீதி, நேர்மை,இரக்கம், போன்ற அறம் சார்ந்த விஷயங்கள், தெய்வ வழிபாடுகள் போன்றவற்றிற்கு காரணமான கிரகம் குரு பகவான். குரு வக்ரமானவர்கள் மேற்கண்ட விஷயங்களை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். மதம், தெய்வ வழிபாடு, புராணக் கதைகள் மற்றும் இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள மேற்கண்ட விஷயங்களைச் சந்திக்கக்கூடியவர்களாகவும், மேற்கண்ட விஷயங்கள் பற்றி பல கேள்விகளை எழுப்பக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். #Iniyavan 
தன்னுடைய சொந்த மதத்தை பற்றியே விமர்சிக்க கூடியவராகவும், தங்களது மதத்தை பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களாகவும் மதம், ஆன்மிக நடைமுறைகள் பற்றிய வித்தியாசமாக கேள்விகள் கேட்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
தன்னுடைய மத விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு பிற மதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ள விழுமியங்கள் அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை பற்றியும் சிந்திப்பவர்கள்.
தங்களுடைய குழந்தைகளின் தேவைகளை அறிந்து அவற்றை முன்கூட்டியே நிறைவேற்றுபவர்கள்.
சுய ஜாதகத்தில் குரு எந்த பாவகத்தில் வக்கிரமாக இருக்கின்றாரோ அந்த பாவகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், எந்த ஆதிபத்யமோ அந்த ஆதிபத்யம் குறிக்கும் விஷயங்களில் விழிப்புணர்வாக இருப்பார்கள். உதாரணத்திற்கு இரண்டு மற்றும் பதினொன்றாம் பாவகங்களில் குரு வக்கிரமாக இருந்தால் தன்னுடைய லாபம், வருமானம், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறியாகச் செயல்படுவார்கள். #Iniyavan

குரு வக்ரமாக இருக்கும் போது ஆரம்ப காலகட்டங்களில் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பணத்தை வரைமுறையின்றி செலவு செய்யக் கூடியவர்கள்.  பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பின்னடைவுகளைச் சந்தித்த பின்னர், பிறருடன் தன்னுடைய பொருளாதார நிலையை ஒப்பிட்டுப் பார்த்து கொண்டு பின்பு,தன்னுடைய வரவு செலவு சம்பந்தப்பட்ட விஷயங்களில்  மிகுந்த சுதாரிப்பாக செயல்படுவார்கள். பண விஷயங்களில் பிறரிடம் ஏமாறக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள். #Iniyavan
விட்டுக்கொடுத்துச் செல்வது சகிப்புத்தன்மை போன்ற  குணங்களால் ஆரம்ப காலகட்டங்களில் ஏமாற்றங்களைச் சந்தித்து பின்பு  அந்த விஷயங்களில் தன்னுடைய செயல்பாடுகளை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வார்கள்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg