இலக்ன பொதுபலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்ன பொதுபலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 டிசம்பர், 2020

விருச்சிக லக்னத்தில்| இராசியில் பிறந்தவரா நீங்கள்?

பன்னிரு இலக்னங்களில் எட்டாவது இலக்னமான விருச்சிகத்தின் தனித்தன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..
விருச்சிகம் காலபுருஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு.
அந்த வகையில் மறைபொருள் விஷயங்களில் திறன் பெற்றவர்கள். இலைமறை, காரியங்களில் கெட்டிக்காரர்கள்.
மற்றவர்களின் ரகசியங்களை வெளிக் கொணர்வதில் வல்லவர்கள்.
ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரின் பலம் மற்றும் பலவீனங்களை எடை போடுவதில் சிறந்தவர்.
செவ்வாய் வலுவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்குரிய இயல்பான குணங்களாக முன்கோபம்,அவசர புத்தி,நல்ல தைரியம் துணிச்சல் போன்ற சுபாவங்களை தன்னகத்தே கொண்டவர்கள். இயல்பிலேயே வேகமாக செயல்படுபவர்களாக, எதிர்ப்புகளை சந்திப்பதில்  துளியளவும் பயவுணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள்.
லக்னாதிபதியான செவ்வாய்,கடன்- நோய் எதிரி போன்ற விஷயங்களை குறிப்பிடும் ஆறாம் அதிபதியாகவும் இருப்பதால் பிரச்சினைகளை சந்திப்பது, எதிரிகளை வெற்றி பெறுவது இவர்களுக்கு இயல்பான விஷயம்.
இயல்பிலேயே பழி வாங்கும் குணமும், எதையும் போராடி பெறும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வைராக்கிய மனப்பான்மையோடு செயல்படுபவர்கள் இவர்களே.
புத்தர் குறிப்பிடுவதைப் போல கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழாமல் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள். நடந்து முடிந்த விஷயத்தைப் பற்றி வருந்தாதவர்கள். நடக்க போகும் விஷயங்களை பற்றியும் பெரிதளவில் அலட்டிக் கொள்ளாதவர்கள்.
லக்னாதிபதி மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் பொழுது எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதில், முயற்சி செய்வதில், செயல்படுவதில் அதீத வேகம் இருக்கும்.
நல்ல உடல் பலம், எவரையும் எதிர்க்கும் திறன் கொண்டவராக உடல் ரீதியாக தன்னை பலப்படுத்துவதில் அதிக கவனம் கொண்டவராக இருப்பார். லக்னாதிபதி 6ல் இருக்கும் போது ஜாதகரின் முறையற்ற செயல்களால் நோய்கள் ஏற்பட்டு அதனால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
லக்னாதிபதியான செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பது சிறந்ததாகும்.தொழில் ரீதியாக மேன்மை பெறும் அமைப்பு.

இவர்களின் இரண்டாம் வீடாக வருவது குருவை அதிபதியாக கொண்ட தனுசு. அந்த வகையில் குடும்ப உறுப்பினர்கள் நன்கு படித்தவர்களாக இருக்க வாய்ப்பு. ஜாதகர் சம்பாத்தியத்தில் நேர்மையை கடைப்பிடிப்பவராக  இருப்பார்.  குருவின் வலுக்கேற்ற வகையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஜாதகர், கல்வி, கேள்விகளில் சிறந்தவராக இருக்க வாய்ப்புண்டு.
இவர்களுக்கு மூன்றாம் வீடாக வருவது சனியை அதிபதியாக கொண்ட மகரம். மூன்றாமிடத்தில் லக்னாதிபதி உச்சம் அடையும் பட்சத்தில் ஜாதகர் தன்னுடைய இளைய சகோதரர்களிடத்தில் இடத்தில் ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார்.
 எந்த ஒரு செயலை தொடங்கும் போது முன்பின் யோசிக்காமல் தொடங்கி அவசரகதியில் செயல்பட்டு பின்பு அதன்பால்பால் வருந்தக் கூடிய அமைப்பு உண்டாகும்.
மூன்றாமிடத்தில் சனி தொடர்பு கொள்ளும் போது முயற்சிகளில் நிதான உணர்வு உண்டு.

நான்காம் அதிபதியாகவும் சனி பகவானே வருவதால் வீட்டில் ஜாதகரின் தந்தையைவிட தாய் திறமையானவராக  இருக்க வாய்ப்பு.
 மூன்று மற்றும் நான்காம் பாவகங்களுடன் சனி  தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் முயற்சி எடுப்பதில் தயக்கம் உடையவராக, ஜாதகருக்கு நடக்கக் கூடிய விஷயங்கள் குறிப்பாக நிலம், பூமி, வீடு, மனை ,வாகனம் தொடர்பான விஷயங்கள் தாமததித்தே நடக்கும்.
3 மற்றும் 4 க்கு உரிய சனி லக்னத்தில் அமரும் போது சுற்றத்தார்,உறவினர் மத்தியில் கெட்ட பெயரை உண்டாக்குவதற்கான  வாய்ப்பினை உண்டாக்கும். 
இரண்டாம் அதிபதியான குரு 5ம் அதிபதியாகவும் வருவதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் காண்பவராக, நல்ல மன மகிழ்வான குழந்தைகளை  பெற்றவராக இருக்க வாய்ப்புண்டு.
குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாக வருவதால் தன்னுடைய நெருங்கிய இரத்த உறவுகள்  பொருட்டு கடன் வாங்கும் சூழ்நிலை, 
ஆறாம் இடத்தில் செவ்வாய் நின்ற நிலையில்
ஜாதகர் நோயால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு.
பாதிக்கப்பட்டாலும் மீண்டெழும் போராட்ட குணத்தை தன்னகத்தே கொண்டவர்கள்.

இவர்களின் ஏழாம் அதிபதியாக வருபவர்  சுக்கிரன். அவரே 12ம் அதிபதியாகவும் வருவதால் மனைவி சற்று ஆடம்பர மனோபாவம் கொண்டவராக இருப்பார்.
 தான் பயன்படுத்தும் விஷயங்களில் உயர்ந்த தரத்தினை பின்பற்றுபவராக  இருக்கலாம். லக்னாதிபதி ஏழாம் இடத்தில் நின்றால் ஜாதகரும் அப்படிபட்டவரே.

இவரின் எட்டாம் வீடாக வருவது புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் தகவல் தொடர்பு, வசதிகள் போன்ற விஷயங்களால் பிரச்சனையை சந்திக்க வாய்ப்பு. மறைவான விஷயங்களில் ஜாதகருக்குஅதீத புத்திசாலித்தனம் இருக்கும். புதனே இலாபதிபதியாக வருவதால் தன்னுடைய தொழிலில் லாபம் குறித்த விஷயங்களை வெளியே சொல்லாதிருப்பதே நல்லது.

இவர்களின் ஒன்பதாம் அதிபதியாக சந்திரன் வருவதால் அன்பான கனிவான தந்தையை பெற்றவராக இருப்பார். ஜாதகருக்கு அவ்வப்போது ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதீத ஜாதகருக்கு அதிக நாட்டமும், ஒரு சில தருணங்களில் அவற்றால் பயனில்லை என்பதாக நினைத்து அவற்றை  வெறுத்து ஒதுக்குபவராகவும் இருப்பார்கள்.
லக்னாதிபதி 9-ஆம் இடத்திலும், 9ஆம் அதிபதி லக்னத்திலும் நீசமாகுவதே இதற்கான காரணம்.

தொழில் நிலையைப் பொறுத்தவரை சூரியன் பத்தாம் அதிபதியாக வருவதால் தொழிலில் நல்ல ஆளுமைத் திறன், சுய தொழில் செய்வதில் ஆர்வம், தொழிலில் புகழ் பெறும் வாய்ப்பு, அரசு பதவிகள், அரசாங்க வழியில் மேலான அனுகூலங்களை பெற்றவராக இருப்பார். இலக்னத்தில் சூரியன் இருப்பது சுய தொழிலில் பெரிய ஈடுபாடு உண்டு.
பெரிய மனிதர்கரளிடம் இருந்து தொழில் ரீதியான ஒத்துழைப்பினை  மிக விரைவில் பெறுபவராகவும் இருப்பார்.

பதினொன்றாம் அதிபதியாக புதன் வருவதால் தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி மறைமுகமான வழிகளில் வருமானம் பெறுபவராக இருப்பார். புதன் 11ஆம் வீட்டுடன் தொடர்பு கொள்ளும் போது அதிக உழைப்பற்ற எளிய வழிகளில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வருமானத்தை தரக்கூடிய வாய்ப்புகளை உண்டாக்கும்.

12ஆம் வீட்டு அதிபதியாக சுக்கிரன் வருவதால் ஜாதகர் சுகபோக விஷயங்களின் பொருட்டு, சுக்கிரனின் காரகத்துவங்களுக்காக அதிகம் செலவளிப்பவராக இருப்பார்.
குறிப்பாக மனைவி, நண்பர்கள், கூட்டு தொழில், ஆடம்பர உபகரணங்கள்  வகையில் அதிகப்பணம் செலவழிப்பர்.
லக்னத்தோடு குரு தொடர்பு கொள்ளும்பொழுது நேர்மையான வழியில் பொருளீட்டுபவராக  நல்ல மனம் படைத்தவராக இருப்பார்கள்.லக்னத்தோடு புதன் தொடர்பு கொள்ளும் போது லாபத்தில் குறிக்கோள் கொண்டவராக, எந்த விஷயத்தை செயலைச் செய்தாலும் அதில் தனக்கு நன்மை உண்டா என்பதை சிந்தித்து செய்பவராக இருப்பார். சந்திரன் தொடர்பு கொள்ளும்போது அவ்வப்போது  மனோரீதியான குழப்பங்களையும், முடிவெடுப்பதில் தயக்கங்களையும்கொண்டவராக இருப்பார். சுக்கிரன் தொடர்பு கொண்டால் ஆடம்பரம் சார்ந்த விஷயங்களில் அதிக நாட்டம் இருக்கும்.
லக்னத்தோடு சனி தொடர்புகொள்வது அதிக சோம்பல் தன்மையும், மந்த உணர்வினையும் உண்டாக்குவதோடு அவப்பெயரையும் பெற்றுத் தரும்.
ராகு தொடர்பு கொள்ளும்போது எல்லா விஷயத்திலும் அதிகப்படியான எதிர்பார்ப்பு கொண்டவராக , எதையும்  பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பார். கேது  தொடர்பு கொள்ளும் போது இயல்பிலேயே அதீத ஞானத்தைக் கொண்டவராக, பெரியளவினில் எதிலும் பற்றில்லதவராக இருப்பார்.
குரு,சூரியன் சாரம் பெற்றுள்ள தசா புத்திகள் முதன்மை நற்பலனையும் சந்திரன், செவ்வாய் சாரம் பெற்ற தசா புத்திகள் மத்திம பலன்களையும் தரும். ராகு கேதுக்களை பொருத்தவரை இலக்ன சுபர்களின் சாரம் பெற்ற நிலையில் நல்ல பலனைத் தருவார்கள்.
இவை அனைத்தும் பொதுபலன்களே. சுய ஜாதகத்தில் கிரகங்கள் நிலை மற்றும் பார்வையைக் கொண்டு பலன்கள் மாறுபடலாம்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

புதன், 23 டிசம்பர், 2020

கன்னி இலக்னத்தில் பிறந்தவரின் குணங்கள்

பன்னிரு இலக்னங்களில் ஆறாவது லக்னமான கன்னி லக்கினத்தின் தனித்தன்மைகள் பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம். கன்னி லக்கனம் புதனை அதிபதியாகக் கொண்ட லக்னம், ஆக இயல்பாகவே  நல்ல புத்திசாலித்தனத்தையும் சாதுரியத்தையும், தொழில்நுட்பங்களையும் தெரிந்தவராக இருப்பார்.

தன்னுடைய புத்திசாலித்தனத்தால் எவரிடமும் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கும் திறன் அறிந்தவர். எதிரிகளை நேரடியாக எதிர்க்காது  தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எதிர்ப்பவர்கள்.
 
தான் செய்யக்கூடிய செயலில் ஆதாயம் இருந்தால் மட்டுமே அந்த செயலை தொடர்பவர்கள், வீண்செயல்கள் எதையுமே  செய்யாதவர்கள்.
மென்மையான சுபாவமும் எல்லோரிடத்திலும் அனுசரித்துச் செல்லும் குணமும் சூழ்நிலைக்கேற்ப தன்னை பொருத்திக் கொள்ளும் திறனையும் இயல்பாய் பெற்றவர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுக் கொள்ளும் தன்மையும், எந்த ஒரு விஷயத்திலும்  உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து உணரும் திறனும் பெற்றவர்கள்.

கல்வி சார்ந்த விஷயங்களில் அதீத திறன் மிக்கவர்.

 கன்னி லக்கின அன்பர்கள் பெரும்பாலும் தூய்மையை விரும்புபவர்களாகவும் தன்னைச்சார்ந்த, தன்னை சுற்றியுள்ள விஷயங்களில் தூய்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.ஏனெனில் காலபுருஷ லக்னத்திற்கு  ஆறாவது வீடாக வருவதால் ஆரோக்கியம் பற்றிய பயம் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

இவர்களின் இரண்டாம் வீடான துலாம் வருவதால் தன்னுடைய இனிமையான பேச்சிலேயே தன்னுடைய காரியத்தை சாதிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் மூன்றாவது வீடாக விருச்சகம் வருவதால் பேச்சினில் ஒரு ரகசியம் எப்பொழுதும் இருக்கும். அவருடைய பேச்சு எப்பொழுது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். ஆகவே பேச்சில் கவனம் தேவை. மேலும் மூன்றாவது வீடாக செவ்வாய் இருப்பதால் இவர்கள் அதீத முயற்சி எடுப்பவராக,எந்த ஒரு செயலிலும் அதிக முயற்சி செய்து வெற்றி பெறுபவராக இருப்பார்கள்.

இவருடைய நான்காவது வீடாக தனுசு வருவதால் அவர்களுடைய தாயார் ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்கவராகவும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த பொறுப்பு உடையவராக இருப்பார்.

ஐந்தாம் வீடாக சனி வருவதால்  அடிக்கடி குழந்தைகளால் சற்று மன வருத்தத்தை அடைபவராக இருப்பார்.

இவர்களின் ஆறாவது வீடாகவும் சனியே இருப்பதால் அதிக உழைப்பு ஆனால் குறைந்த வருவாய் உடையவர்களாகவும் அவ்வப்போது நோய், மற்றும் கடன்களால் பாதிப்பை அடைபவர்களாக இருப்பார்கள்.

 இவர்களின் ஏழாம் அதிபதியாக குரு வருவதால் நல்ல துணையை பெற்றவர்கள். 
இவர்களின் துணை இவரைவிட புத்திசாலியாக இருப்பதால் ஜாதகர் அவர்களிடம் இறங்கிப் போக வேண்டியிருக்கும்.

 இவருடைய நண்பர்களும் அதிகம் பண வசதி படைத்தவர்களாக இருப்பார்கள் .
பெரும்பாலும் இவர்களுக்கு பெண் நண்பர்கள் அதிகம். ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதியாக வருவதாலும், ஏழில் புதன் லக்னாதிபதி நீசம் அடைவதாலும் இவர்களுக்கு கூட்டுத்தொழில் பெரும்பாலும் சரிவராது.
எட்டாம் அதிபதியாக செவ்வாய் வருவதால் போக்குவரத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில்,வண்டி வாகனங்களில் சற்று கவனம் தேவை, ஏனெனில்  விபத்துகளை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

இவர்களின் ஒன்பதாம் அதிபதியாக சுக்கிரன் வருவதால் தந்தை சற்று பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் அதிக செலவு செய்பவராகவும் தான தருமங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்.

இவர்களின் பத்தாம் அதிபதியே லக்னாதிபதியே வருவதால் தொழிலில் சாதுர்யம் பெற்றவர்களாகவும் பெரும்பாலும் தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு சார்ந்த தொழில்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் பேச்சை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் 11ஆம் அதிபதியாக சந்திரன் வருவதால் நிலையற்ற தன வரவை பெற்றவர்களாகவும் அதிகமாக செலவு செய்பவர்களாகவும் இருப்பார்கள். ஆக வருமானத்தை சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
மேலும் பதினொன்றாம் அதிபதியாக சந்திரன் இருப்பதால் இவர்களின் அபிலாசைகள் இவர்களின் முயற்சி இன்றியே பூர்த்தி அடையும் வாய்ப்பு உண்டு.
12ம் அதிபதியாக சூரியன் வருவதால் அரசு வழியில் விரயச்செலவுகள் செய்பவராகவும் இருப்பார். மேலும் ஆழ்ந்த நித்திரையை பெறதவராக இருப்பார்.
லக்னம் தவிர்த்து மற்ற கேந்திரங்களில் நிற்காத புதன்,சுக்கிரன், சனி ஆகியோரின் திசாபுத்திகள், இவர்களின் சாரம் பெற்றுள்ள தசா புத்திகளும் இவர்களுக்கு மேன்மையைத் தரும்.

இவை அனைத்தும் பொதுப் பலன்கள் ஆகும்.

இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும். சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
 
நன்றி,
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138


சிம்ம இலக்னத்தில் பிறந்தவரின் குணங்கள்

சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு சூழலிலும் மன உறுதியை இழக்காதவர்கள்.இறுதிவரை போராடி எந்த ஒரு முடிவையும் மற்றும் மனப் பக்குவம் உடையவர்கள்.

தங்களுடைய விருப்பங்களையும் இலக்குகளையும் லட்சியங்களையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாதவர்கள்.

தயக்கம் இல்லாத தலைமைத்துவம் பெற்றவர்கள்.முன் கோபமும் பிடிவாதமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள்.
எந்த ஒரு சூழலிலும் விளைவுகளைப் பற்றி அஞ்சாது செயல்படுபவர்கள்.
தன்னை நாடி அடைக்கலம் தேடி வந்தவர்களை அரவணைத்து காப்பவர்,அதே நேரத்தில் தன் எதிரிகளை துவம்சம் செய்பவர்கள்.கொண்ட கொள்கையில் இறுதிவரை கடமை உணர்வோடு திகழ்பவர்கள்.எடுத்துக்கொண்ட வேலைகளில் இறுதிவரை நேர்மையை பின்பற்றுபவர்கள்.இவர்களின் வரையறையில் நேர்மை என்பதன் பொருள் வேறு.
பொழுதுபோக்குகளில் பெரிய அளவில் நாட்டம் இல்லாதவர். அவற்றை அலட்சியப்படுத்தும் மனப்பான்மை உடையவர்.
எவரிடத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அடிபணிவதில் விருப்பம் இல்லாதவர். தமக்கே மற்றவர் அடிபணிந்தாக வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.
இவரின் இரண்டாவது வீடாக வருவது புதன் பேச்சாற்றலும் அதிக புத்திசாலித்தனமும் ஒருங்கே பெற்றவர்,ரசிக்கக்கூடிய பேச்சாற்றல் அதே நேரத்தில் அதிகாரமும் கலந்து இருக்கும்.
இரண்டாம் அதிபதியே பதினொன்றாம் அதிபதியாக வருவதால் தன்னுடைய பேச்சை லாபமாக மாற்றுவதில் திறமை உடையவர்.
மூன்றாம் அதிபதியாக சுக்கிரன் வருவதால் தன்னுடைய சகோதரர் சகோதரிகளுடன் அதிக பாசம் உடையவர். பெரும்பாலும் அவர்களிடம் தோற்றுப் போவார் பாசத்திற்காக.

நான்காம் அதிபதியாக செவ்வாய் வருவதால் நிலபுலன்களை அதிகம் வாங்குபவராக இருப்பார்.
நான்காம் அதிபதியே ஒன்பதாம் அதிபதியாகவும் வருவதால்
தந்தை மற்றும் முன்னோர்கள் சொத்துக்களை பெற்றவராகவும் இருப்பார். 
இவரின் தாய் ஆதிக்கம் நிறைந்தவராகவும் அதிகாரம் மனப்பான்மை உடைய வராகவும் இருப்பார்.

இவர்களின் 5ம் அதிபதியாக குரு வருவதால் நல்ல புத்திரனை பெரும் யோகம் உடையவராக இருப்பார். பூர்வ புண்ணியங்கள் ஆகியவற்றை அதிகம் பெற்றவராக இருப்பார்.
தன்னுடைய குழந்தைகளை ஆன்மீக உணர்வுள்ள, தர்மத்தில் அதிக ஈடுபாடு உள்ள குழந்தைகளை வளர்ப்பதில் விருப்பம் உடையவராக இருப்பார்.

இவரின் ஆறாம் அதிபதியான சனி வருவதால் பலவீனமும் சோம்பலும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. அடிக்கடி வயிறு தொடர்பான பிரச்சனை, கால்வலியும் சசந்திப்பவராக இருப்பார்.
அதிக எதிரிகளை பெற்றவராகவும் இருப்பார்.
பொதுவான பிரச்சனைகளில் இவரின் ஈடுபாடு, தலையீடு இல்லாவிட்டாலும் அந்த பிரச்சனையிலும் இவர் எதிரிகளைப் பெற்று இருப்பார்.அதிக உழைப்பும் குறைந்த வருமானமும் பெற்றவர்.

ஆறாம் அதிபதியே ஏழாம் அதிபதியாகவும் வருவதால் மனைவி இவருக்கு அடங்காதவராக  இருப்பார்.
ஐந்தாம் அதிபதியான குருவே எட்டாம் அதிபதியாக வருவதால் அவ்வப்போது குழந்தைகளால் துன்பங்கள்,தொல்லைகளை அனுபவித்து வருபவராகவும் இருப்பார்.
எட்டில் குரு ஆட்சி பெறுவதால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவ்வப்போது பிரச்சினைகள், இவர் மீது குற்றச்சாட்டுகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

இவரின் ஒன்பதாவது வீடாக செவ்வாய் வருவதால் தந்தையின் மீது அதிக பாசம் கொண்டவராக இருப்பார்.தந்தையின் சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டெனிலும் விரையாதிபதி சந்திரன் இங்கே இருத்தல் கூடாது.

லக்னாதிபதியான சூரியனும் செவ்வாயும் வீட்டில் உச்சம் பெறுவதால் அரசு வழியில் அனுகூலம், கெளரமான பதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

பத்தாம் அதிபதி சுக்கிரனாக வருவதால் தொழிலில் அதிக ஈடுபாடு, எல்லா விஷயங்களையும் லாப நோக்கோடு அணுகுவதுது இவரின் இயல்பாக இருக்கும்.
பதினொன்றாம் அதிபதியாக புதன் வருவதால் தன்னுடைய சுய முயற்சியால் தன்னுடைய அறிவுக் கூர்மையால் புத்திசாலித்தனத்தால் தன்னுடைய பேச்சாற்றலால் தொழிலில் மேன்மை அடைவபவராக இருப்பார்.இவருடைய தாய் மாமன் வகை உறவுகளால் இவர் அதிக ஆதாயம் இருப்பவராகவும் இருப்பார்.

இவருடைய எண்ணங்கள், அபிலாசைகள் ஆகியவை விரைவில் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

அவருடைய 12ம் அதிபதியாக சந்திரன் வருவதால் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் புண்ணிய காரியங்கள் , கௌரவத்திற்காகவும் செலவுகள் இவருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
காஞ்சி மகா பெரியவர், கவியரசு கண்ணதாசன் போன்றோர் சிம்ம லக்கினக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன், குரு, புதன் மற்றும் செவ்வாய் இவர்களின் தசா புத்திகள் இவர்களுக்கு மேன்மை தரும்.இவர்களின் சாரம் பெற்ற கிரகங்களும் ஒரளவு நன்மை தரும்.

சனி மற்றும் சுக்கிரன் பெரும்பாலும் நன்மைகள் தருவதில்லை. ராகு கேதுக்கள் சிம்ம லக்கினத்திற்கு பொதுவாக சிரமம் தருபவர்கள். எனினும் லக்ன சுபர் தொடர்பு இருப்பின் தீமை செய்வது இல்லை.

இவை அனைத்தும் பொதுப் பலன்களே.
சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
நன்றி 
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன். MA.B.ED
CELL 9659653138

கடக இலக்னத்தில் பிறந்தவரின் குணங்கள்

பன்னிரு லக்னங்களில் நான்காவது இலக்கனமான கடகத்தின் தனித்துவத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

கடக லக்ன அன்பர்கள் மற்றவர்களிடத்தில் அதிக அன்பு மிகுந்தவர்கள்.
அதே நேரத்தில் அன்பிற்காக ஏங்குபவர்கள்.நிமிடத்திற்கு ஒரு புத்தி,நிமிடத்திற்கு ஒரு சிந்தனை என்பதற்கேற்ப நிலையில்லாத மனநிலைக்கு சொந்தக்காரர்கள்.எண்ணிலடங்கா கற்பனை ஆற்றல்களுக்கு சொந்தக்காரர்.கடந்த காலத்தில் வாழ்பவர்கள்.அதே நேரத்தில் எதிர்கால வாழ்க்கையை நினைத்து கற்பனை கோட்டை கட்டுபவர்களும் கூட.கற்பனை உலகில் மெய்மறந்து போகக் கூடியவர்கள்.மற்றவர்களுக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யக் கூடியவர்கள்.தன்மானம் மிக்க தலைவராக வரும் தகுதி படைத்தவர்கள், மனிதநேயம் மிக்க மாண்பாளர்கள்.தாராள மனம் கொண்டவர்கள் அதே நேரத்தில் மிகவும் சிக்கனமாகவும் செயல்படக்கூடியவர்கள்.தன்னுடைய தனித்தன்மையும் அறிவாற்றலையும் நினைத்து கர்வம் கொள்பவர்கள்.
இயல்பிலேயே தாயின் மீது அளப்பரிய அன்பும் பாசமும் உடையவர்கள் தாயின் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள்.
தந்தை மற்றும் முன்னோர்களின் சொத்துக்கு உரியவர் ஆவார்.

இவர்களின் இரண்டாம் அதிபதி சூரியன். பேச்சில் கர்வம் அதிகம் நிறைந்திருக்கும்.
மனதில் பட்டதை பேசும் தைரியம் உடையவர்கள்.வாக்கின் மூலம் பெறும் வளம் பெரும் வாய்ப்பும் உண்டு.பேச்சில் கவனம், நாவடக்கம் மேன்மை தரும்.
இவர்களின் மூன்றாம் அதிபதி புதன்,எழுத்தாற்றல் மிக்கவர், தகவல் தொடர்பில் சிறந்து விளங்குபவர்கள், புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதில் அதீத ஆர்வம் உடையவர்கள், அதில் தன்னையே மறப்பவர்கள்.

4-ஆம் இடத்திற்கு சுக்கிரன் அதிபதியாவதால் ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகம் உடையவர்.இவர்களின் ஐந்தாம் வீடு செவ்வாய். ஐந்தில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். அதே நேரத்தில் லக்னாதிபதி 5-ம் இடத்தில் நீசமும் அடைகின்றார்.
பிடிவாத சுபாவம் அதிகம் உள்ள குழந்தைகளை கொண்டவர்.

ஆறாம் அதிபதி குரு இவர்களின் எதிரிகள் இவர்களைவிட வல்லமை படைத்தவர்கள், இருப்பினும் இவர்கள் எதிரிகளை வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள்.
ஒன்பதாம் அதிபதியே ஆறாம் அதிபதியாவதால் தந்தை வழி உறவினர்கள் இடத்தில் விரோதத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். சில சமயம் தந்தையையே எதிர்க்க வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். அனுசரித்து செல்லல் மேன்மை..

இவர்களுக்கு ஏழாம் அதிபதி சனியாவதால் தாமத திருமணம் இவர்களுக்கு மேன்மையை நல்கும்.
இவர்களின் குணங்களுக்கு நேர்மாறான துணை அமையும்.ஏழாம் அதிபதி 10இல் நீசமடைவதால் மனைவிவழி உறவினர்கள் மூலம் ஜாதகரின் தொழிலுக்கு தொல்லைகள் உண்டாகலாம்.
கூட்டுத் தொழில் மேன்மை தருவதில்லை,
7-க்குடையவர் 10-ல் நீசமடைவதால் தொழிலில் நண்பர்களால் நன்மை கிடையாது.

எட்டாம் அதிபதியும் சனி என்பதால் தொழில் பொதுஜன தொடர்புகளில் அவ்வப்போது இடையூறுகள் , கடன் தொல்லை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்.

ஒன்பதாம் இடம் குருவாவதால் தர்ம குணம், ஆன்மீக எண்ணங்கள், செயல்பாடுகளில் அதிக விருப்பம் உடைய தந்தை அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மேலும் ஜாதகர் தர்ம ஸ்தாபனங்கள் வைத்து நடத்துவதற்கு வாய்ப்புகள், 
புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பத்தாம் அதிபதி செவ்வாய் என்பதால் உயர் பதவிக்கான வாய்ப்புகள்,பெயர்,புகழ் ஆகியவற்றை தரும் பணியில் அமர்தல் ,அரசியல்,மருத்துவம் சட்டம், நிர்வாகம், காவல் சம்பந்தப்பட்ட துறைகள் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

பத்தாமிடத்தில் சூரியன் ஆட்சி பெறுவதால் அரசியல் சார்ந்த விஷயங்களில் அதிக செல்வாக்கு உடையவர். அரசியலில் மேன்மையான பதவிகளை வகிப்பவர். பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அக்கறையுடன் செயலாற்றுபவர்.
தொழில் ஸ்தானத்தில் இரண்டாம் அதிபதி உச்சம் பெறுவதால் தந்தை மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்,தொழில் மூலம் ஜாதகர் பெரும் பொருளீட்டும் திறன் பெற்றவர் ஆவார்.

இவர்களின் பதினொன்றாம் இடம் சுக்கிரனின் வீடாவதால் அபிலாஷைகள் பூர்த்தியாகும்.
குருவின் பன்னிரெண்டாம் இடமாக புதன் வருவதால் அறிவு சார்ந்த விஷயங்களான புத்தகங்கள்,  ஜோதிடம், கணிதம், அறிவியல் தகவல் தொழில் நுட்ப பொருட்களுக்காக அதிகம் செலவிடுபவராக இருப்பார்.
12ஆம் வீட்டிற்கு உரியவர் புதனாவதால் ஆழ்ந்த நித்திரைக்கு சொந்தக்காரர்கள்.

சந்திரன்,சூரியன், குரு, செவ்வாய் திசைகள் இவர்களுக்கு மேன்மையைத் தரும்.இவர்களின் சாரம் பெற்றவர்களும் நன்மை செய்வார்கள்.
சனி, புதன்,சுக்கிரன்  திசைகள் இவர்களுக்கு பெரும்பாலும் நன்மை தருவதில்லை. சாரத்தை பொறுத்து நன்மைகள் நடைபெறலாம்.
இவர்களுக்கு செவ்வாய் பலம் பெறல் அவசியம் மற்றும் மேன்மையாகும்

 மகா ஞானி புத்தர், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி தமிழகத்தின் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, காமராஜர் ,கலைஞர் இவர்களெல்லாம் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும்.சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடும் 
நன்றி 
Astrologer
 ப.இனியவன் கார்த்திகேயன்.MA.B.ED
Cell 9659653138

ரிஷப இலக்னத்தில் பிறந்தவரின் குணங்கள்

12 லக்னங்களில் இரண்டாவது இலக்கனமான ரிஷப லக்கனத்தின் தனித்தன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

ரிஷப லக்கனத்தில் அதிபதி சுக்ரன் என்பதால் இவர்கள் தனித்துவம் நிறைந்தவர்களாகவும் சிற்றின்ப பிரியர்களாக, அனைத்தையும் அனுபவித்தாக வேண்டும் என்ற எண்ணம் உடையவர் களாகவும், விரும்பியதை அடைய வேண்டும் என்ற எண்ணம் உடையவராகவும் இருப்பார்கள்.
பொதுவாக ரிஷப லக்கின அன்பர்கள் கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர்கள்,மற்றவர்களிடத்தில்  இனிமையாகப் பழகுபவர்களாகவும்,கலை, கேளிக்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாகவும் ஏதாவது ஒரு கலையில் தேர்ந்தவர்கள் ஆகவும் ஆடை அணிகலன்கள் அணிவதில் விருப்பம் உடையவர்களாகவும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
 கடந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலைகள் இல்லாமல் நிகழ்காலத்தில் வாழுங்கள் என்ற புத்தரின் வாக்கிற்கு ஏற்ப நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணம், விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.
 கடின உழைப்பின்றி புத்திசாலித்தனமான உழைப்பினால் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்.
 
தம்முடைய பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பிலே உடையவர்களாகவும்,பணத்தை நோக்கியே பயணப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் இரண்டாவது வீடாக வருவது மிதுனம்.. அதன் அதிபதி புதன் என்பதால் பேச்சில் நளினம் காணப்படும்.  பேச்சினில் சாதுர்யம் காணப்படுவதால் பேச்சிலே சாதிப்பவர்கள், புத்திசாலித்தனம்,கணிதத்தில் ஈடுபாடு..

இவர்களின் மூன்றாவது வீடாக வருவது கடகம். கடகத்தின் அதிபதி சந்திரன் அவ்வகையில் அலைபாயும் மனநிலையை உடையவர்களாக, எப்போதும் எதையாவது நினைத்து கவலைப்படுபவர்களாகவும்,தங்களது சகோதரர் சகோதரிகளிடம் அதிக பாசம் உடையவர்களாகவும்
தங்களது நட்பு வட்டாரத்தில் அவ்வப்போது அதிக ஈடுபாடும் அவ்வப்போது ஈடுபாடு இல்லாத நிலையற்ற தன்மையும்  இவர்களிடத்தில் காணப்படும்.
ரிஷப லக்னத்திற்கு நான்காவது வீடு சிம்மம், சிம்மத்தின் அதிபதி சூரியன் என்பதால்  இவரின் குடும்பத்தில் தாய் என்பவரே தந்தையின் ஸ்தானத்தை ஏற்று நடத்துபவராகவும் அதாவது தாய் என்பவர் ஆதிக்கம்,அதிகாரம் நிறைந்தவராக இருப்பார்.

ரிஷப லக்கனத்தில் ஐந்தாவது  வீடு கன்னி.
தங்களது குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாகவும்,குழந்தைகளிடத்தில் அதிக அன்பு பாசம் கொண்டவராக இருப்பார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப் போனவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களது ஆறாம் வீட்டின் அதிபதியாக வருபவர் லக்னாதிபதியான சுக்கிரனே. நினைத்த வேலையை போராடி பெரும் குணம் உடையவர்களாகவும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும் உடையவர்களாகவும் அடிமைத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

 ஏழாம் வீட்டின் அதிபதியாக இருப்பவர் செவ்வாய் அவ்வகையில் தன்னுடைய குணங்களுக்கு மாறுதலான துணையைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவருக்கோ பணம், பொருளாதாரம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். ஆனால் வரக்கூடிய துணைக்கோ இவரின் மீது அதிக அன்பும்  பாசமும், குடும்பத்தின் மீது அக்கறையும் நிறைந்திருக்கும்.
இவர்களது எட்டாம் வீடாக வருவது குருவின் தனுசு ராசி. தங்கள் வாழ்வில் நிறைய சங்கடங்கள் எதிர்ப்புகள் தொல்லைகள், குழந்தைகளால் அவ்வப்போது இன்னல்களை அடைபவர்களாகவும் இருப்பார்கள்.
இருப்பினும் எதிர்ப்புகளையும் சமாளித்து தன்னுடைய சுய கௌரவத்தை நிலைநாட்டுபவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களது ஒன்பதாம் வீடாக வருவது சனியின் மகரம்..தெய்வ அனுகூலம், தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும் பொறுப்புணர்வு உள்ள தந்தையை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் பத்தாமிடம் வருவது சனியின் கும்பம் அதிக உழைப்பு ஆனால் குறைந்த வருமானம் கொண்டவர்களாகவும் செய்யக்கூடிய தொழில் தன்னுடைய வருமானத்தில்  மட்டுமே அதிக கவனம் அதாவது சுயநல மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பதினொன்றாம் வீடாக குருவின் மீனம் வருவதால் இவர்களின் எண்ணம் அபிலாசைகள் பூர்த்தியாகும் ஆன்மீகத்தில் நாட்டம்,ஆன்மீகத்தில் ஈடுபாடும் நிறைந்திருக்கும்.

இவர்களது 12-ம் வீடான மேஷம் வருவதால் நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் ஈடுபடுவராகவும், அவ்வப்போது மருத்துவச் செலவுகள் அதாவது இவருக்கோ அல்லது இவரின் குடும்பத்தாருக்கோ மருத்துவச் செலவுகள் செய்பவராகவும் இருப்பார்.

கிருஷ்ண பரமாத்மா,விக்டோரியா மகாராணி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் போன்றவர்கள் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இவை அனைத்தும் பொதுப் பலன்களே.
சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
நன்றி 
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

மேஷ இலக்னத்தின் குணங்கள்

12 லக்னங்களின் முதல் இலக்கணமான மேஷ லக்கினத்தின் பொதுவான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் இனி வரும் பதிவுகளில் அடுத்தடுத்த இலக்னங்களுக்கான குணங்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்..

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட வர்கள்  அவ்வகையில் செவ்வாய்க்குரிய அந்த முரட்டுக் குணம், தைரியம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்றவர்கள்.
மேஷத்தில் சூரியன் ஆட்சி பெறுவதால் தலைமைத்துவப் பண்பு இவரிடம் நிரம்பி காணப்படும்.
மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்து லக்னத்திலேயே செவ்வாய் ஆட்சி பெற்றவர்கள் அல்லது மகரத்தில் உச்சம் பெற்றுள்ளவர் இயல்பிலேயே பிடிவாதக்காரர்களாகவும் முரட்டு தைரியம்,துணிவு மிக்கவர்களாகவும்  கோபம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
குருவின் பார்வை இங்கே கிடைக்கும் பட்சத்தில் சற்று நிதான போக்கும் காணப்படும்.எதிலும் முதன்மை எல்லாவற்றிலும் தலைமை என்பது இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
போட்டி மனப்பான்மையுடன் வாழ்பவர்கள் விட்டுக்கொடுக்க தெரியாதவர்கள்.நிதான மனப்பான்மை என்பது இவரிடத்தில் துளியளவும் காணப்படாது. எடுத்தெறிந்து பேசும் மனப்பான்மை அதே நேரத்தில் நகைச்சுவையும் பேசக்கூடியவர்கள் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள்.

பிடிவாதம் மனப்பான்மை என்பது இவர்களிடம் இயல்பாகவே உள்ளதால் எதையும் போராடிப் பெறும் குணமும் இயல்பாகவே அமைந்திருக்கும்.
இவர்களுக்கு இரண்டாம் வீடு சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் அவ்வகையில் அழகான குடும்பம், சிறப்பான பேச்சாற்றல் நிறைந்தவர்கள்.

இவர்களின் மூன்றாமிடம் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் புதன் இளமைக்கு உரிய கிரகம்.

மேலும் மூன்றாம் இடம் என்பது முயற்சி ஸ்தானம்.. இளமையானவர்கள் முயற்சி செய்யத் தயங்குவதில்லை என்பதற்கு ஏற்ப இவர்களும் முயற்சி செய்ய தயங்காதவர்கள்.
இவர்களது நான்காம் வீடு சந்திரனை அதிபதியாக கொண்ட கடகம். அவ்வகையில் தாய் மீது அன்பும் அளப்பறியா பாசமும் கொண்டவர்கள்.
இவர்களின் ஐந்தாம் வீடு சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மம்.
மேலும் புத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படுவதும் 5-ஆம் இடமே.அவ்வகையில் குழந்தைகளிடத்தில் அதிக பாசம் கொண்டவர்கள். குழந்தையை போட்டி மனப்பான்மையுடனும் ஆளுமைத் திறனுடனும் வளர்ப்பவர்கள் ஆக இருப்பவர்கள் மேஷ லக்னக்காரர்கள்.

இவர்களின் ஆறாவது வீடு கன்னி. முயற்சி செய்து வெற்றி எதிர் நோக்கும் தன்மை உடையவராக இருப்பார்கள். ஏழாவது வீடு சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம்.
சுக்கிரன் என்றாலே அழகு அவ்வகையில் அழகான துணையை பெற்றவர்கள் மேஷ லக்னக்காரர்கள்.

இவர்களின் எட்டாவது வீடு விருச்சிகம். விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் இங்கே லக்னாதிபதி ஆகவும் இருப்பதால் இங்கே அட்டமாதிபத்திய தோஷம் இவர்களுக்கு கிடையாது. அதனால் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல ஆயுளும் உண்டு.

இவர்களுக்கு ஒன்பதாம் வீடு குருவை அதிபதியாக கொண்ட தனுசு. தந்தை மீது அன்பும் அளப்பரிய பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.இவர்களது பத்தாம் வீடு சனி அதிபதியாக கொண்ட மகரம். உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

இவர்களது பதினொன்றாம் வீட்டிற்கும் சனி பகவானே அதிபதியாக வருவதால் இவருடைய அபிலாசைகள் நிறைவேறுவதற்கு சற்று தாமதமாகும். 

இவர்களது பன்னிரண்டாம் வீடாகிய விரய ஸ்தானத்திற்கும்  குரு பகவானேஅதிபதியாக வருவதால் மோட்சம், முக்தி பற்றிய அறிவு இயல்பாகவே நிரம்பப் பெற்றவர்களாக இருப்பார்கள். விரய ஸ்தானாதிபதியாக குருபகவான் இருந்தாலும் அவர் 9-ஆம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பதால் பெரியளவில் தீமைகள் செய்வதில்லை..
மாவீரன் அலெக்சாண்டர் முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜகான் ஆகியோர் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும். சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138


மிதுன இலக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பன்னிரு இலக்கனங்களில் மூன்றாவது இலக்கனமான மிதுனத்தின் தனித்தன்மைகளை பற்றி  அறிந்து கொள்வோம்..

காலபுருஷ லக்கனத்திற்கு மூன்றாவது வீடு. ஆக இயல்பாகவே அவர்கள் தகவல் தொடர்பில் சிறந்து விளங்குவார்கள்.தன்னுடைய செயல்பாடுகளில் சுயநலம் மிகுந்து காணப்படுபவர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் சாமர்த்திய சாலிகள் .
எவரையும் நேரடியாக எதிர்க்காமல் அவரின் போக்கிலேயே நடந்து காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.எழுத்தாற்றல் அறிவாற்றல் புத்தி சாலித்தனம் ஆகியவற்றில் திறன் மிக்கவர்கள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி தன்னுடைய எதிரிகளை வீழ்த்துபவர்கள். தகவல்களை பரப்புவது, சண்டை மூட்டுவதில் வல்லவர்.

இவர்களின் இரண்டாவது வீடாக வருவது கடகம்.தன்னுடைய சிந்தனைகளை பணமாக மாற்றுபவர்கள். நிலையில்லாத தனவரவு பெற்றவர்கள்.இனிமையாகப் பேசுவார்கள் அதே நேரத்தில் முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றிப் பேசுவார்கள்.இவரின் மூன்றாவது அதிபதியாக சூரியன் வருவதால் அரசு உதவியும் ஆதரவும் அவர்களுக்கு பக்கபலமாக அமையும். அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயல்படும் ஆற்றல் உடையவர்கள்.இவர்களின் நான்காவது அதிபதியாக லக்னாதிபதியான புதன் வருவது சிறப்பு கல்வி கேள்விகளில் சிறந்த ஆர்வமுடையவர்கள். தொடர்ந்து எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நினைப்பில் இருப்பவர்.வேலைகளில் ஈடுபடும் பொழுது வேறு எந்த விஷயத்திலும் கவனத்தை செலுத்தாதவர்.ஐந்தாம் அதிபதி  சுக்கிரன் இருப்பதால் பயணங்களில் அதிக விருப்பம் உடையவர்.அழகான நிதானமான பொறுப்புணர்வுள்ள குழந்தைகளை உடையவர்.இவர்களின் ஆறாவது அதிபதியாக செவ்வாய் வருவதால் எப்பொழுதும் எதற்காவது கடன் வாங்கும் சூழ்நிலைகள் உருவாகும்.தன்னுடைய எதிரிகளை வெல்லும் ஆற்றலும் இயல்பாக பெற்றிருப்பவர்.
ஏழாம் இடம் குருவின் இடமாக வருவதால் தன்னைவிட அறிவில் சிறந்த சற்று கர்வம் உடைய தன்மானம் மிக்க துணை அமைவதற்கு வாய்ப்புகள். திருமணத்திற்கு பின்பே உத்தியோகத்தில் முன்னேற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் ஏழாம் அதிபதியான குருவே அவர்களுக்கு பத்தாம் அதிபதியாகவும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டாம் அதிபதியாக சனி வருவதால் பொதுஜன பிரச்சினைகள், வம்பு, வழக்கு ,விபத்துகள், கண்டம் போன்ற பிரச்சனைகள்.இவர்களின் ஒன்பதாவது அதிபதியாகவும் சனி பகவானே வருவதால் தந்தை மூலம் புண்ணியத்தையும் தர்மத்தையும் பெற்றவராக இருப்பார்.பூர்வீக சொத்துக்கள் தான தரும ஈடுபாடு,  இரக்க மனப்பான்மை, நேர்மை ஆகிய குணங்களை பெற்றவராகவும் இருப்பார்.

 பத்தாம் அதிபதியாகவும் குரு பகவானே வருவதால் கௌரவமான மதிப்புமிக்க தொழில் அமைவதற்கான வாய்ப்புகள். மற்றவர்களுக்கு சேவை செய்யும் தொழில்கள்,கல்வி நிறுவனங்கள், சுய தொழில்கள் போன்றவை அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
 இவரின் பதினொன்றாவது அதிபதியாக செவ்வாய் வருவதால் பிரச்சனைகள் ,கலகங்கள், வம்பு, வழக்குகள் போன்றவற்றால் பயன் பெறுபவராக இருப்பார்.மிதுன லக்கினத்திற்கு 12ம் அதிபதியாக சுக்கிரன் வருவதால் கலை,கேளிக்கை , ஆடம்பரம் சார்ந்த விஷயங்கள் ,அழகு சாதன பொருட்கள் போன்றவற்றில் அதிக செலவு செய்பவராக இருப்பார்.
 
 மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சனியின் திசை நன்மை நல்கும் சந்திர தசையும் ஓரளவு பரவாயில்லை.புதன் கேந்திரத்தில் இல்லாமல் இருப்பின் அவருடைய திசை நன்மைகளை நல்கும்.குரு, செவ்வாய், சூரியன் போன்றவர்களின் திசைகள் மிகப்பெரிய அளவில் நன்மைகள் செய்வதில்லை. ராகு கேதுக்கள் லக்ன சுபரின் தொடர்பு பெற்றால் நன்மைகள் நல்கும்.
இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும்.சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
நன்றி 
ஜோதிட ஆர்வலர்  
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
CELL 9659653138