செவ்வாய், 26 ஜூலை, 2022

மீன இலக்னத்திற்கு குரு தசா எப்படியிருக்கும்?


இலக்ன ரீதியாக ஒன்பது கிரகங்களின் தசா புத்தி காலங்கள் எந்ததெந்த  இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்த்து வருகின்றோம்.
ஏற்கனவே மீன லக்னத்திற்கு சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் தசா காலங்கள்  எந்தெந்த இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று மீன லக்னத்திற்கு லக்னத்திற்கு லக்னாதிபதி குருவின் தசா எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதை பார்ப்போம்.

மீன லக்னத்திற்கு லக்னாதிபதி குரு லக்னத்தில் இருக்கும் போது  ஆட்சி மற்றும் திக்பலத்தினை அடைவார்.
ஜாதகர் இயல்பிலேயே நேர்மையானவராக, நல்ல எண்ணங்கள், நல்ல நடத்தை கொண்டவராக இருப்பார்.
கடவுள் நம்பிக்கை, ஆச்சார அனுஷ்டானங்களில் அதிகப்படியான விருப்பம், பெரியோர்களை மதித்து பணிவுடன் நடப்பது, அதே நேரத்தில் சுயமரியாதை மற்றும் கெளரவமாக நடந்து கொள்வார்.
லக்னத்தில் இருக்கக்கூடிய குரு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வதால் குழந்தைகள் வகையிலும், வாழ்க்கைத்துனை  வகையிலும் தந்தை வகையிலும் நல்ல பலன்களைப் பெறுவார்.

லக்னத்தில் இருக்கக்கூடிய குரு பகவானின் தசா ஜாதகருக்கு தொழில் ரீதியாகவும் நன்மை தரும்.
இரண்டாம் இடமான மேஷத்தில் குரு இருப்பதை பொருத்தவரை குருவிற்கு அது நட்பு வீடாகும். தன்னுடைய 9-ஆம் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் குருவின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணி, நீதித்துறை, தங்கம், வங்கித்துறை போன்றவற்றில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் குரு இருப்பதை பொருத்தவரை அது அவருக்கு பகை வீடு என்றாலும், ரிஷபம் இயற்கை சுபர் வீடு என்ற வகையில் நல்லதாகும்.
மூன்றாம் இடம் குறிக்கக்கூடிய ஆதிபத்தியம் சார்ந்த பலன்கள் நல்ல வகையிலேயே இருக்கும்.

மூன்றாம் வீட்டில் இருக்கக்கூடிய குரு தனது ஏழாம் பார்வையால் 9ம் வீட்டை பார்ப்பதால் பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டை பார்க்கிறார் என்ற அடிப்படையில் ஒரு வகையில் தொழில் ரீதியான நல்ல பலன்களை ஜாதகருக்கு தன்னுடைய தசா காலங்களில் தருவார்.

 நான்காமிடத்தில் இருக்கக்கூடிய குரு தன்னுடைய ஏழாம் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் புதனுடைய வலுவிற்கு ஏற்ப தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்களைத் தருவார்.
தனது 9ம் பார்வையால் லக்னத்திற்கு 12ம் வீட்டை பார்ப்பதால் ஜாதகர் இயல்பிலேயே நல்ல தர்மவுணர்வு மிக்கவராக இருப்பார்.

5-ல் இருக்கக்கூடிய குரு உச்சம் பெற்ற நிலையில் இருப்பார். உச்சம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய குரு 9 மற்றும் 11ஆம் வீடு மற்றும் இலக்னத்தினை பார்ப்பது ஒரு வகையில் நல்ல பலன்களைத் தரும்.
இருப்பினும் தனித்த நிலையில் உச்சம் பெற்று லக்னத்தைப் பார்ப்பது ஜாதகரை அதிகப்படியான இரக்க சிந்தனை உள்ளவராகவும் ஏமாளியாகவும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இந்த இடத்தில் நீசம் பெற்ற செவ்வாயுடன் இணைந்து இருப்பது, அல்லது கேதுவுடன் இணைந்து கேள யோகத்தில் இருப்பது போன்றவை நல்ல பலன்களைத் தன்னுடைய தசா காலங்களில் தரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ஆறாம் இடமான சிம்மத்தில் குரு இருப்பதை பொருத்தவரை நண்பருடைய வீடாக இருப்பது சிறப்பு.
ஆறாம் குறிக்கக்கூடிய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல பலன்கள் உண்டு.
 
சூரியன் வலுத்து இருக்கக்கூடிய பட்சத்தில் உயர்பதவிகள் மற்றும் தந்தை வகையில் மேன்மையான பலன்களை ஜாதகர் பெறுவார்.
ஆறில் இருக்கக்கூடிய குரு தனது ஐந்தாம் பார்வையால் 10-ஆம் இடத்தையும் 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் 9-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும் பார்ப்பார்.
அந்த வகையில் தொழில், குடும்பம்,வருமானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் இருக்கும். 12ஆம் வீட்டை வலுப்பெற்ற குரு பார்ப்பதால் ஜாதகர் இயல்பிலேயே கொடையாளியாக இருப்பார்.
ஆறாம் இடம் குறிக்கக்கூடிய கடன், நோய், எதிரி சார்ந்த பிரச்சினையும் ஆறில் இருக்கக்கூடிய குருவின் தசா தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
ஏழாமிடத்தில் இருக்கக்கூடிய குரு தன்னுடைய பார்வையால் லக்னத்தை பார்ப்பதால் ஜாதகர் இயல்பிலேயே நேர்மையானவராக இருப்பார். 

பொதுஜன தகவல்தொடர்பு நண்பர்கள் கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிக்கக்கூடிய ஏழாம் இடத்தில் இருப்பதால் மேற்கண்ட விஷயங்கள் வாயிலாக ஜாதகர் நல்ல பலன்களை பெறக்கூடியவராக இருப்பார்.
வாழ்க்கைத்துணை வாயிலாகவும் நல்ல பலன்களை ஜாதகர் பெறுவார்.

தன்னுடைய பார்வை படக்கூடிய 11ம் இடம் மற்றும் மூன்றாம் இடம் வாயிலாகவும் நல்ல பலன்களை தன்னுடைய தசா காலங்களில் ஜாதகருக்கு தருவார்.

எட்டாம் இடமான துலாத்தில் குரு இருப்பதை பொருத்தவரை ஜாதகரை தூர தேசங்களுக்கு நகர்த்தி  பிழைக்கச் செய்வார். பூர்விகத்தில் இருக்க இயலாத நிலையை தருவார். சனி ராகு போன்ற பாவிகள் உடைய தொடர்பினை பெறுவது நல்லதல்ல.
 ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குரு இருப்பதை பொறுத்தவரை 5-ஆம் பார்வையால் லக்னத்தை பார்ப்பார். தன்னுடைய 7-ஆம் பார்வையாக 3-ஆம் வீட்டைப் பார்ப்பார் .தன்னுடைய 9-ஆம் பார்வையால் 5-ஆம் இடத்தைப் பார்ப்பார்.
அந்தவகையில் மூன்றாம் இடம் மற்றும் ஐந்தாம் இடம் குறிக்கக் கூடிய ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்களைத் தன்னுடைய தசா காலங்களில் ஜாதகருக்கு தருவார்.
 
10-க்குடையவர் ஒன்பதில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பிற்குரிய அமைப்பாகும் . தொழில் ரீதியாக மிக மேன்மையான பலன் தருவார். இந்த இடத்தில் செவ்வாயுடன் (9,10) பரிவர்த்தனை பெற்றிருப்பதும் மிக மேலான பலன்களை தன்னுடைய தசா காலங்களில் ஜாதகருக்கு தொழில் ரீதியாக தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாமிடமான தனுசில் குரு ஆட்சி பெற்று நிலையில் இருப்பார் கேந்திராதிபதி கேந்திர ஸ்தானத்தில் ஆட்சிபெற்று நிலையில் இருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இவ்விடத்தில் இருக்கக்கூடிய குரு  செவ்வாயின் இணைவு அல்லது பார்வையோ பெறுவது நல்லது. கேதுவுடன் இணையலாம். சூரியனுடன் இருப்பதும் சிறப்பானதாகும்.
தன்னுடைய ஏழாம் பார்வையால் லக்னத்திற்கு நான்காம் இடத்தையும், தன்னுடைய 9-ஆம் பார்வையால் லக்னத்திற்கு 6-ஆம் இடத்தையும் பார்ப்பதால் 4-ஆம் இடம் குறிக்கக்கூடிய நிலம், பூமி, வீடு, மனை, தாயார் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் ஆறாமிடம் குறிக்கக்கூடிய வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நல்ல பலன்களை தன்னுடைய தசா காலங்களில் ஜாதகருக்கு தருவார்.

குருவின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வேலை பார்ப்பதற்கான  வாய்ப்புகள் 
உண்டு. பத்தில் இருக்கக்கூடிய குரு தனது ஐந்தாம் பார்வையால் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் பெரும்பாலோர் ஆசிரியர் பணியில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

பதினோராம் இடமான மகரத்தில் குரு இருப்பது பொருத்தவரை நீசம் பெற்ற நிலையில் இருப்பார். ஆகவே இந்த இடத்தில் செவ்வாயுடன் இணைந்து இருப்பது அல்லது வீடு கொடுத்த சனி உச்சம் பெறவது அல்லது சந்திரகேந்திரத்தில் இருப்பது அவசியம்.
 வளர்பிறைச் சந்திரனாக இருந்து, சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருப்பதை பொருத்தவரை இந்த இடத்தில் குருவை நீச நிலை எடுக்க வேண்டியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீசம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய குரு இந்த இடத்தில் சனியுடன் இணைந்து இருப்பது அல்லது சனியின் பார்வையைப் பெறுவதும் குருவின் காரகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

12ஆம் இடமான கும்பத்தில் குரு இருப்பதை பொருத்தவரை ஜாதகரை ஆன்மீகவாதியாக,தர்ம உணர்வு  மிக்கவராக மாற்றுவார்.
ஆறாம் இடமான சிம்மத்தை பார்ப்பதால் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள், தந்தை வகையிலும் நல்ல பலன்களைத் தருவார். தனது ஐந்தாம் பார்வையால் நான்காம் இடத்தைப் பார்ப்பதால் நிலம், பூமி, வீடு, தாயார், வாகனம்,கல்வி வகையில் நல்ல பலன்களைத் தருவார்.
இவை அனைத்தும் பொது பலன்களே.. இணைந்துள்ள மற்றும் பார்த்துள்ள கிரகங்கள் அடிப்படையிலும், வீடு கொடுத்தவரின் பலம், பலவீனம் அடிப்படையில் பலன்கள் மாறுபடலாம்.
சனியின் சமசப்த பார்வையைப் பெற்ற குரு அல்லது சனியுடன் மிக நெருங்கிய குரு, ராகுவுடன் மிக நெருங்கி இருக்கக் கூடிய குரு தன்னுடைய தசா காலங்களில் நல்ல பலன்களைத் தரமாட்டார்.
இவர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தொடர்ச்சியாக வழிபட்டு வருவது நல்லதாகும்.
அடுத்த பதிவில் மீன லக்னத்திற்கு சனி தசா எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்ப்போம்.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக