ஞாயிறு, 31 ஜனவரி, 2021

ஜாதகத்தில் பலன் சொல்வது எப்படி? பாகம்- 01

ஜாதகம் பார்க்க வந்திருப்பவர் என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பதை சொல்வது எவ்வாறு?

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை தசா புக்திகளே சம்பவிக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாகின்றன. அந்த வகையில் நடந்து முடிந்த புத்தியினையும், தற்போது நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்தியினை ஆராய்வதுடன், பார்க்க வந்தவரின் வயதினை  ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஜாதகம் பார்க்க வந்தவர் எந்த மாதிரியான பிரச்சனையில் இருப்பார் என்பதை ஓரளவு யூகிக்க இயலும்.

உதாரணத்திற்கு ஒன்று முதல் பத்து வயது வரை உள்ள குழந்தையின் ஜாதகத்தை ஒருவர் கொண்டு வந்திருக்கிறார் என்றால் பெரும்பாலும் கேள்வி குழந்தையின் ஆயுள் பலம், ஆரோக்கியம் தொடர்புடைய கேள்வியாகவோ அல்லது குழந்தை பிறந்த பின்பு பெற்றோரின் பொருளாதார மேம்பாடு குறித்த கேள்வியாக இருக்க கூடும். இதோடு மட்டுமின்றி அடுத்த குழந்தையை பற்றி கேள்வியாகவோ அல்லது குழந்தை பிறந்த பின்பு பெற்றோர்களுக்கு இடையேயான  சண்டை, கருத்து வேறுபாடு அல்லது பிரிவினை குறித்த கேள்வியாகவும் இருக்கக் கூடும்.

மேற்கண்ட விஷயங்களுடன் குழந்தைக்கு தற்போது நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்தி மற்றும் கோட்சார நிலைகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது பிரச்சனையை கண்டறிய இயலும். உதாரணத்திற்கு குழந்தையின் ஜாதகத்தில் சுகஸ்தானமான நான்காம் அதிபதி பாதிக்கப்பட்ட நிலையில் 6ம் அதிபதியோடு தொடர்புடைய தசாபுக்திகள் நடக்கும் போது கண்டிப்பாக கேள்வியானது குழந்தையின் ஆரோக்கியம், உடல்நலம் குறித்த பிரச்சினைகளாக  இருக்கக்கூடும். குழந்தை இலக்னப்படி பன்னிரு பாவகங்கள் குறிக்கும் உடல் பாகங்களையும், இவற்றோடு காலபுருஷ இலக்னப்படி  உடல் பாகங்களை ஆராயும் போது எந்த உறுப்பு சம்பந்தமான பிரச்சினை உள்ளது என்று தீர்மானிக்க இயலும்.

கோட்சார ரீதியாக குழந்தைக்கு ஏழரை மற்றும் அட்டமச் சனி நடைபெற்று,
தசாபுக்தி ரீதியாக 4 மற்றும் 9 ஆம் அதிபதிகள் பாதிப்படைந்த நிலையில், வலுப்பெற்ற 6, 8 ஆம் அதிபதிகளுடன் தொடர்பு கொண்டு நிலையில் தசா புத்திகள் நடக்குமானால் தாய், தந்தை  இடையே கருத்துவேறுபாடு, பிரிவினை, உடல்நலப் பிரச்சனைகள் குறித்த கேள்வியாக இருக்க வாய்ப்பு உண்டு.
குழந்தையின் ஜாதகத்தில் வலுப் பெற்ற நிலையில் மூன்றாம் அதிபதியுடன் தொடர்புடைய தசா புக்திகள் நடைபெறுமானால் அடுத்த குழந்தை என்னவாக இருக்கும் என்பது குறித்த கேள்வியாக இருக்கலாம்.

குழந்தையின் ஜாதகத்தில் 2,11ம் பாவகங்கள் வலு குறைந்து, பன்னிரண்டாம் பாவகம் வலுப்பெற்று தசாபுக்தி நடக்குமேயானால் குழந்தை பிறந்த பின்பு பொருளாதாரப் பிரச்சினைகள், விரயச் செலவுகள் ஏற்பட்டிருப்பதைக் உணர்த்தக் கூடும். 2,11ம் பாவகங்கள் வலுப்பெற்று நான்கு, ஒன்பதாம் பாவகங்கள் தொடர்புபெற்று தசாபுக்தி நடக்கும் போது குழந்தை பிறந்த பின்னர் தாய், தந்தையின் பொருளாதாரம் மேம்பட்டு இருப்பதை உணர்த்தும்.
அதோடு தாய், தந்தையரின் தொழில் நடவடிக்கைகள் குறித்த கேள்வியாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் நடந்து முடிந்த, நடப்பில் உள்ள தசா மற்றும் புத்தி நாதன் குறித்து ஆதிபத்திய விஷயங்களையும் கோட்சாரத்தையும் ஆராயும் பொழுது என்னை கேள்வி என்பதை ஓரளவு கண்டறிய இயலும்.

நிறைவாக இலக்னம் முதல் 12 பாவகங்கள், மற்றும் நவகிரகங்கள்  பல்வேறு காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் குறிக்கும். அந்த வகையில் ஜோதிடர், தொடர்புடைய கேள்வி எந்த விஷயம் என்பதைச்  சரியாக தேர்ந்தெடுக்க இறையருள் அவசியமாகும்.

அடுத்த பதிவில் 10 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் ஜாதகம் பார்க்க வரும் நிலையில் அவர்களின் பொதுவான கேள்விகள் எதுவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்...
இணைந்திருங்கள்...
நன்றிகளுடன்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138


2 கருத்துகள்:

  1. எனது ஜாதகத்தில் லக்னம் கடகம், ராகுவும், ....கன்னியில்.சந்திரன்,....விருச்சகத்தில்.சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்... தனுசில். சனி....மகரத்தில்.கேது, வியாழன்...
    03.12.1961.... கேது- ராகு க்குள் அனைத்து கிரகங்களும்... உள்ளார்கள்.... நன்மை...தீமை... என்ன என்று அறிய வேண்டும். எனது வாட்சாப் 9434299045. நன்றி

    பதிலளிநீக்கு