வெள்ளி, 28 மார்ச், 2025

பரிகாரம் செய்து விடுவதால் எதிர்மறையான பலன்கள் நடக்க இருப்பதை தவிர்த்து விட முடியுமா?



இன்று பார்த்த ஜாதகம்.

கன்னி லக்னம், மீன ராசியில் பிறந்த அந்த ஜாதகருக்கு இலக்னத்தில் அட்டமாதிபதி செவ்வாயுடன் ராகு இணைவு, ஏழில் சனியுடன் கேது  மற்றும் சந்திரன், தற்போது அந்த ஜாதகருக்கு 28 வயது முடிந்து ஒரு மாதம் 18 நாட்கள் ஆகிறது
திருமணத்திற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். இந்த வருடத்திற்குள் எப்படியாவது திருமணம் செய்து வைக்கலாம் என நினைக்கின்றோம். திருமணத்திற்கு எப்படிப்பட்ட பெண் அமையும் என்பதே  ஜாதகருடைய தந்தையின் கேள்வி..

கோட்சார ரீதியாக நாளையிலிருந்து 
(29 03-2025) ஜென்ம சனி அந்த பையனுக்கு ஆரம்பிக்க இருக்கின்றது. அதோடு நடந்து கொண்டிருப்பது அட்டமாதிபதி செவ்வாயின் பார்வையை பெற்று சனியுடன் இணைந்த கேதுவின் தசாவில், லக்னத்தில் செவ்வாயுடன் இணைந்து ராகுவின் புத்தி நடப்பில் இருக்கிறது..

இது மட்டுமின்றி அந்தப் பையனின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நீசம் பெற்றிருக்கிறார். பரிவர்த்தனை மூலமாக அவர் ஆட்சி பெற்று இருந்தாலும் ஏழாம் இடம் சனி செவ்வாய் ராகு  தொடர்பினால் அதீத பலவீனமாக இருக்கிறது.
இதோடு 11 ஆம் இடத்தை மூன்று சுபர்கள் பார்த்து வலுப்படுத்துகின்றனர்.

எப்பொழுது இலக்ன, ராசிக்கு ஏழாம் இடங்கள் பாபர்களின் தொடர்பை பெற்று ஏழாம் அதிபதியும் பலவீனமாகி 11ஆம் இடம் வலுத்திருக்கிறதோ அப்பொழுது திருமணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். இதுபோன்ற நிலைகளின் தாமதம திருமணமே பெரும்பாலும் சிறப்பு தரும். மிக விரைவில் அவசரப்பட்டு திருமண வாழ்க்கை அமைத்துக் கொள்வது கண்டிப்பாக பிரச்சினை ஏற்படுத்தி இருதார அமைப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஜென்ம சனி காலகட்டம் முடியும் வரை திருமணத்தை தவிர்த்து விடுங்கள் என்றேன்.#Iniyavan

அதோடு ஜென்ம சனி முடிந்த பிறகு, கேது தசாவில் லக்னாதிபதி புதன் களத்திரக்காரனான சுக்கிரடன் இணைந்த நிலையில் இருப்பதால், புதன் புத்தியில் திருமணம் அமைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்று கூறினேன்.


உடனே ஜாதகரின் தந்தையார் அவ்வளவு காலம் எங்களால் காத்திருக்க முடியாது. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள் பரிகாரத்தை செய்து கொண்டு திருமணத்தை நடத்திக் கொள்கிறோம் என்று கூறினார்.

தசா புத்திகள் சரியில்லாத நிலையில் எதிர்மறையான ஒரு நிகழ்வு நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, நாம் உணர்த்தும் போது அதற்காக ஒரு பரிகாரம் சொல்லுங்கள். நான் செய்து கொள்கிறேன் என்று கூறுவது சரியானது அல்ல. பரிகாரத்தால் நடக்கக்கூடிய பாதிப்பை முற்றிலுமாக பெரும்பாலும் நீக்கிவிடவே முடியாது.#Iniyavan

நீங்கள் பரிகாரம் செய்துவிட்ட  காரணமாக ஏழாம் இடத்தோடு தொடர்பு கொண்ட சனி, செவ்வாய், ராகு  போன்ற பாப கிரகங்கள் சுபர்களாக மாறி நல்ல பலன்களை தந்து விட மாட்டார்.

இயற்கை பாபர்கள் பாதிப்பை தரக்கூடிய நிலையில் இருக்கும் போது மேற்கொண்டு சுப கிரகங்களின் தொடர்பில் இருக்கும் போது மட்டும்  அவர்கள் பாதிப்பை தர மாட்டார்கள். அதை விட்டுவிட்டு ஜாதகர் பரிகாரம் செய்து விட்டால், பாப கிரகங்கள் பாதிப்பை தர மாட்டார்கள் என்பது தவறான கருத்து. கிரகங்கள் பரிகாரம் செய்தவரை ஒருவகையாகவும், பரிகாரம் செய்யாதவரை வேறு வகையாகவும் நடத்துவது கிடையாது.#Iniyavan

இதோடு அவருக்கு நடப்பில் இருக்கக்கூடிய கேது தசா எதிர்பாலின ரீதியாக ஏமாற்றங்களை தந்திருக்கும் என்று கூறிய பட்சத்தில், ஜாதகரின் தந்தை, ஆம் ஏற்கனவே என் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். கடைசியில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் ஆகிவிட்டது என்று கூறினார்.

நீங்கள் ஏற்கனவே பரிகாரத்தை செய்து அதை மாற்றி இருக்கலாமே எனக் கேட்டபோது அவர் பதில் பேசவில்லை..

அதோடு அவருடைய ஜாதகத்தில் கேது பிரிவினை,எதிர்ப்பு, வம்பு, வழக்கு போன்ற விஷயங்களை சுட்டிக்காட்ட கூடிய ஆறாம் அதிபதி  சனியின் இணைவினை பெற்று, அட்டமாதிபதி செவ்வாயின் பார்வையைப் பெற்று தசா நடத்துகின்றார். மாதாக் காரகன் என்று அழைக்கப்படக்கூடிய சந்திரனுடன்  பிரிவினையைத் தரும் ஆறாம் அதிபதி சனியுடன் இணைந்து இருக்கிறார். அது மட்டும் இன்றி, நான்காம் அதிபதி அவருடைய ஜாதகத்தில் நீசம், அதோடு சனியும் பத்தாம் பார்வையாக நான்காம் வீட்டை பார்க்கின்றார் . அட்டமாதிபதி செவ்வாயும் ராகுவுடன் இணைந்து தாய் சார்ந்த விஷயங்களை சுட்டிக்காட்டக்கூடிய நான்காம் வீட்டை, தன்னுடைய நான்காம் பார்வையால் பார்க்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
அதனால் கேது தசாவில் ஜாதகருக்கு தாய், தாய் வழி சொந்த பந்தங்கள் வழியில் விரோதம் ஏற்பட்டிருக்கும். தாயார் சார்ந்த விஷயங்கள் அவ்வளவு தூரம் இந்த கேது தசாவில் சிறப்பாக இருந்திருக்காது என்று கூறினேன். உடனே ஜாதகருடைய தந்தையார் நானும் என்னுடைய மனைவியும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். அதோடு தன்னுடைய பையன் படிக்காமல் போனதற்கு காரணமே தாயார் தான். பையனின் தாயார், பையனுக்கு படிப்பு வரவில்லை என்று சொல்லி பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பியதாக சொன்னார்.

இத்தனை விஷயங்கள் ஜாதகத்தில் தசா புத்தி ரீதியாக நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஏன் மேற்கண்ட விஷயங்களை பரிகாரம் செய்து ஏன் நல்லபடியாக மாற்றவில்லை என கேட்ட பொழுது  அவரால் மீண்டும் பதில்கூற இயலவில்லை.#Iniyavan

பரிகாரம்  பலனளிக்கும் என்பது உண்மைதான். பரிகாரங்கள் மனிதனின் மனதிற்கு  உளவியல் ரீதியாக பாதுகாப்பு தரக்கூடிய கவசம் மட்டுமே. பெரும்பாலான பரிகாரங்கள் மனதிற்கு தன்னம்பிக்கை அளிக்கக் கூடியவை. பரிகாரங்களால் தசா புத்திகள் தரக்கூடிய எதிர்மறையான விஷயங்களை அப்படியே முழுமையாக சாதகமாக்கிக் கொள்ள ஒரு காலமும் முடியாது.  நடக்கக்கூடிய தசா புத்திகள் சரியில்லாத நிலைகளில் ஒரு பாதிப்பு வரக்கூடும்  உணரக்கூடிய பட்சத்தில் அதற்காக பரிகாரம் செய்து விடுகிறேன். பரிகாரம் செய்துவிட்டு மேற்கண்ட பாதிப்புகளை தவிர்த்துக் கொள்கிறேன் என்று நினைப்பது அறிவுடைமை ஆகாது. பரிகாரம் செய்து விடுவதால் பாதிப்பை தரக்கூடிய இயற்கை பாப கிரகங்கள் தங்களுடைய இயல்பை மாற்றிக்  சுபகிரகங்களாக மாறிவிட மாட்டார்கள்.

பரிகாரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் கிரகங்கள் தங்களுக்குரிய இயல்பில்தான் இருப்பார்கள் என்பதுதான் உண்மை.

பொதுவாகவே ஏழாம் இடம் ராகு, கேதுக்களின் தொடர்பினை பெற்று பலவீனமாகி, ஏழாம் அதிபதியும் சரியில்லாத நிலைகளில் 11ஆம் பாவகம் வலுத்து இருக்கக்கூடிய பட்சத்தில் இளம் வயதில் திருமணத்தை தவிர்ப்பது நலம்.

மேலே பார்த்த ஜாதகத்தில் இந்த விதி 100 சதவீதம் பொருந்திப் போகிறது . இலக்னத்திற்கு மட்டுமின்றி, ராசிக்கு ஏழாம் இடமும் பலவீனமடைந்து ராசிக்கு 11ஆம் இடமும் வலுப்பெற்று நிலையில் இருக்கக்கூடிய ஜாதகம் இதுவாகும்.

அதோடு தற்போது நடப்பிலும் ஜென்ம சனி ஆரம்பிக்க இருக்கிறது. இத்தருணத்தில் பரிகாரம் செய்து விடுவதால் எதிர்மறையான பலனை  அவரால் மாற்றிவிட முடியும் என நினைப்பதே எதிர்மறையான விளைவுகள் நடக்கப் போவதற்கான துவக்கமே.. ஆகையால் 
இக்காலகட்டத்தை தவிர்ப்பது மட்டுமே நல்லதாகும்.#Iniyavan

 உண்மையில் வாழ்க்கையில் வரக்கூடிய சில தாமதமான நிகழ்வுகள், எதிர்கால நன்மைக்காகவே இருக்கும் என பெரியோர்கள் சொல்வது இதன் காரணமாகவே..

எப்போது திருமணம் செய்யலாம்?

2028 அக்டோபர் மாதத்திற்கு மேல் களத்திரக் காரகன் சுக்கிரன் மற்றும் ஏழாம் அதிபதி குருவுடன் இணைந்துள்ள புதன் புத்தியில் திருமணம் நடக்கும்.  அக்காலகட்டத்தில் மீன ராசிக்கு ஜென்மச் சனியும் நீங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக உங்கள் பையனுக்கு கன்னி இலக்னத்திற்கு யோகத்தை தரக்கூடிய ராஜ யோகாதிபதி சுக்கிரன்,  ஐந்தாம் இடத்தில் நின்று,  இலக்னாதிபதி புதன் இணைவினைப் பெற்ற நிலையில் சுக்கிர தசா வர இருப்பதால் உங்கள் பையனுக்கு  எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தாமத திருமணம் செய்வது மட்டுமே உங்களுடைய மகனின் ஜாதக ரீதியாக நல்ல மணவாழ்க்கையை தரும் என்று சொன்ன பிறகு அவர் ஓரளவு ஏற்றுக் கொண்டார்..

சில தாமதங்கள் நம் மனதிற்கு ஏமாற்றத்தை தரலாம். நம் மனதை அதிகப்படியான வருத்தத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் அவை எதிர்கால நன்மைக்காக அன்றி வேறொன்றும் இல்லை. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையை திசை மாற்றக் கூடிய பெரிய அளவிற்கான  பிரச்சனைகளை கண்டிப்பாக தவிர்த்து விட முடியும்.#Iniyavan 

ஒரு விஷயத்தை தள்ளிப் போடுவதால் ஏற்படக்கூடிய தாமதத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியுமே தவிர, பரிகாரத்தால் அல்ல என்பதே எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்...
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஞாயிறு, 9 மார்ச், 2025

குரு தரும் ஏமாற்றம்...



சுய ஜாதகத்தில் 1, 5, 9ஆம் பாவங்களில் குருவின் தாக்கம்| #Iniyavan 

ஜோதிடத்தில், குரு பகவான் ஆன்மிக ஈடுபாடு, நல்லறிவு, நற்செயல், விசுவாசம், நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வினை கொண்டு செல்லுதல் போன்றவற்றை குறிக்கிறது. 
சுய ஜாதகத்தில் லக்னம் (1), புத்ர ஸ்தானம் (5), பாக்கிய ஸ்தானம் (9) போன்ற பாவங்களில் குரு இருப்பது ஒரு பாக்கியமாக கருதப்படுகிறது.
லக்கினத்திற்கு ஏழாம் பாவகத்தில் இருந்து லக்னத்தை பார்ப்பது, அதேபோல் ராசியினை, லக்னாதிபதியினை குரு பார்ப்பதும் நல்ல நிலையே...

ஆனால் இந்த நிலை ஒருவருக்கு மிகுந்த நம்பிக்கை, அன்பு, தர்ம உணர்வு, அதீத இரக்க சுபாவம் ஆகியவற்றை ஜாதகரிடத்தில் அதிகம் ஏற்படுத்துவதால்  இருப்பதால், பிறர் அவர்களை எளிதில் ஏமாற்றி விடுவார்கள். குரு 1, 5, 9 ஆகிய பாவங்களில் இருப்பது நன்மை தரக்கூடியதாக இருந்தாலும், சில நேரங்களில் இது  எல்லோரையும் அதிகப்படியாக நம்பும் தன்மை, மனிதர்களைப் பற்றிய நன்றியுணர்வு, மற்றும் கருணை உணர்வுகள் அதிகமாக இருப்பதை குறிக்கலாம். இதன் விளைவாக, அவர்கள் எளிதில் பிறரால் ஏமாற்றப்படக்கூடியவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஏன் குரு 1, 5, 9 பாவங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்?

1 ஆம் பாவத்தில் (லக்னத்தில்) குரு – எளிதில் நம்பிக்கையுடன் வாழ்பவர்கள்

இலக்னத்தில் குரு இருப்பவர்கள் மன ரீதியாக எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பார்கள்.

தன்னைப் போலவே பிறரை நல்லவர்களாகவே கருதி நம்பி செயல்படுவார்கள்.

எளிதில் எவரையும் விசுவாசித்து ஏமாற்றம் அடையக் கூடும்.

எல்லோருக்கும் தயங்காமல் உதவி செய்வார்கள் தனக்கு ஒரு இக்கட்டான தருணம் வரும்பொழுது தயங்காமல் மற்றவர்களும் நமக்கு உதவி செய்வார்கள் என நினைப்பார்கள். ஆனால் இவர்களுக்கு இக்கட்டான தருணங்கள் ஏற்படும்பொழுது, இவர்களுக்கு யார் உதவுகின்றார்களோ அல்லது இல்லையோ இவர்கள் யாருக்கு உதவினார்களோ அவர்கள் இவர்களுக்கு நிச்சயம் உதவுவதில்லை

பெரும்பாலும் இவர்களுடைய திறன்களை, இவர்களுடைய ஆதரவை, மற்றவர்கள் தன்னுடைய தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள்...

குரு நல்ல புத்திசாலித்தனத்தையும், நேர்மையையும் தரும். ஆனால், மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே என்ற எண்ணத்தினையும் இவர்களிடத்தில் தரும். இது ஆபத்தானது, எல்லா மனிதர்களும் இயல்பில் நல்லவர்கள் அல்ல..

இந்த குணம் அவர்கள் எதையும் சந்தேகிக்காமல் நம்புவதற்கு வழிவகுக்கும்.

தவறான நண்பர்களால் ஏமாற்றப்படக்கூடிய தன்மை அதிகம்.

தவிர்க்க வேண்டியவை:

யாரிடமும் உடனடியாக நம்பிக்கை கொள்ள வேண்டாம்.

முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்பு அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.

தனிப்பட்ட விவரங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

---

5ஆம் பாவத்தில் (புத்திர பாவத்தில்) குரு – கனிவான மனம் கொண்டவர்கள்

இவர்கள் குழந்தைகளைப் போல் தூய்மையான மனநிலையுடன் இருப்பார்கள்.

மற்றவர்களின் சொற்களை நேராக எடுத்துக் கொள்ளும் தன்மை உள்ளவர்கள்.

மற்றவர்கள் தங்களைப் பற்றி தவறுதலாக சொல்லும் பொழுது ஒரு சிறு விமர்சனத்தை கூட தாங்கிக் கொள்ளாத அளவிற்கு மெலிவான மனம் படைத்தவர்கள்.

பிறரின் போலியான உணர்வுபூர்வமான வார்த்தைகள் மற்றும் கனிவான சிந்தனைகள் இவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும்.

ஒருவரின் இக்கட்டான சூழ்நிலை கருதி ஒருவருக்கு இவர்கள் உதவினாலும் சில சூழ்நிலைகளில் அவர்கள் இவருக்கு எதிராகவே செயல்படுவார்கள். #Iniyavan

இது அதிகமான அன்பும், தாராள மனப்பான்மையும் கொடுக்கும்.

அன்பு என்ற பெயரில் ஒருவர் மனம் கவரப்பட்டு, பிறர் அவர்களை நன்மைக்காக பயன்படுத்தலாம்.

இந்த இடத்தில் இருக்கும் குருவால் காதல் தொடர்பான ஏமாற்றங்கள் அடிக்கடி ஏற்படலாம்.

தவிர்க்க வேண்டியவை:

யாரிடமும் உளம் கவிழ்ந்து அதிகம் பேசக்கூடாது.

பண உதவிகளை யாருக்கும் அனுபவமின்றி செய்யக்கூடாது.

எல்லோரிடத்திலும் முட்டாள்தனமாக அதீத தாராளமான மனப்பான்மையோடு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது

---

9ஆம் பாவத்தில் (பாக்கிய ஸ்தானத்தில்) குரு – ஆழ்ந்த விசுவாசம் கொண்டவர்கள்... #Iniyavan

இவர்கள் பெரும்பாலும் அறம் சார்ந்த நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும்  என்ற எண்ணங்களை கொண்டவராக இருப்பார்கள்.

மற்றவர்களை மிகுந்த கருணையுடன் நேசிப்பார்கள். மற்றவர்களால் தான் ஏமாற்றப்படுவதைக் கூட பெரியளவில் பொருட்படுத்த மாட்டார்கள்..

9-ஆம் பாவம் தர்மம், நற்சிந்தனை, உயர்ந்த கொள்கைகளை குறிக்கும்.

இவர்கள் பிறரை மதிக்கிறார்கள், பெருந்தன்மையுடன் நினைக்கிறார்கள் அதேபோல் பிறரும் தன்னை மதிக்கிறார்களா? பெருந்தன்மையுடன் நம்மை நடத்துவார்களா? என அவர்களை இவர்கள் சந்தேகிக்க மாட்டார்கள் 

அவர்களது நல்ல மனதை சிலர் தவறாக பயன்படுத்தலாம், குறிப்பாக உறவினர்கள், நண்பர்கள், மற்றும் மதத் தலைவர்கள்.

தவிர்க்க வேண்டியவை:

ஒருவரைப் பற்றி முழுமையான பின்புலம் தெரியாமல் ஆன்மிகம்  தொடர்பான விஷயங்களில் முழு நம்பிக்கை வைக்கக்கூடாது.

எல்லோரிடத்திலும் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை

எந்த ஒரு மத அல்லது ஆன்மிக அமைப்பில் சேவை சார்ந்த இவர்களுக்கு பணம் அளிப்பதற்கு முன்பு  ஆராய வேண்டும்.
---
குருவால் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்கான வழிமுறைகள்

திரிகோண பாவங்களில் (1, 5, 9) குரு இருப்பவர்கள் பிறரால் எளிதில் ஏமாறக்கூடிய நிலை ஏற்படும், ஏனெனில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை, கருணை, தாராள மனப்பான்மை, மற்றும் நல்ல எண்ணங்கள் அதிகம் இருக்கும். இதனால், பிறரின் சொற்களை உடனே நம்பிவிடுதல், நல்லவர்களாகவே எண்ணுதல், தீயவர்களை அடையாளம் காண இயலாமை போன்ற பிரச்சினைகள் நேரிடலாம். அவர்கள் ஏமாறாமல் இருக்க மற்றும் பிறர் தங்களுடைய நல்ல மனப்பான்மையை தவறாக பயன்படுத்தாமல் இருக்க செய்ய வேண்டிய சில முக்கியமான செயல்பாடுகள்:

1. எல்லைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் (Set Boundaries)

அனைவருக்கும் நான் எப்போதும், எல்லா சூழ்நிலையிலும் உதவுவேன் என்ற எண்ணத்தை கொண்டிருக்கவே வேண்டாம்

நம்முடைய நேரம், பணம், ஆற்றல், உதவி ஆகியவற்றை யாருக்கெல்லாம் வழங்க வேண்டும் என்பதற்கு நியாயமான வரம்பினை வைத்திருக்க  வேண்டும்.

"நான் இதை செய்ய முடியாது" அல்லது "இது என்னால் சாத்தியமாகாது" என்று சொல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். #Iniyavan

2. யாரும் கூறியதை உடனே நம்பக்கூடாது (Verify Before Trusting)

பிறர் நம்மிடத்தில் சொல்லும் நம்பகமான வார்த்தைகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.

நம்மிடத்தில் அதிகம் கரிசனம் காட்டும் நபர்கள், அவர்களுடைய சொந்த லாபத்திற்காக மட்டுமே நடிக்கலாம், எனவே நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

முக்கியமான விஷயங்களில் ஒரே நபரின் வார்த்தையை மட்டும் நம்பாமல், பல்வேறு மூலங்களில் இருந்து அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

3. சூழ்நிலைகளைக் கவனிக்கவும் (Observe Situations Carefully)

யாராவது உதவி கேட்டால், அவர்கள் முன்பு எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

உங்களை ஒருவர் உதவிக்காக மட்டும் உபயோகிக்க நினைத்தால், அதைப் புரிந்து கொண்டு அவருடைய பழக்கவழக்கத்தை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும்

4. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் (Control Emotional Reactions)

குரு 5 அல்லது 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஒருவித  தன்மையான தாராள மனநிலை இருக்கும்:
"நாம் அனைவருக்கும் உதவ வேண்டும்". ஆனால், இது பிறரால் தவறாக பயன்படுத்தப்படும்.

எல்லோருக்கும் உதவ முடியாது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நேரம், பணம், ஆற்றல் வீணாவதை குறைக்க சிந்தித்து செயல்பட வேண்டும்.

5. வன்மையாக "இல்லை" சொல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

நேரம், உதவி, பணம் போன்றவை அதிகம் கேட்கப்படும் போது எல்லோருக்கும் 'ஆம்' என்று சொல்லக்கூடாது.

"இல்லை" (No) என்று சொல்லும்போது பதட்டம் ஏற்படலாம், ஆனால் இது நீண்ட கால நன்மைக்காகவே. #Iniyavan

நல்ல மனநிலை கொண்டவர்களே பெரும்பாலும்  ஏமாறுவார்கள் என்பதால், ஒரு தடவை ஏமாற்றம் வந்தவுடன் அதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. உங்களை சுயமாக பாதுகாக்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்

தயவுசெய்து நன்கொடைகளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டாம்.

முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நல்ல நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

7. இன்றைய நண்பனும் நாளை நமக்கு எதிரியாகலாம் என்ற கண்ணோட்டத்துடன் எவரிடமும் பழக வேண்டும்.

8.யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக்கூடாது என்பதை தீர்மானிக்க எப்போதும் அறிவுடன் செயல்படுங்கள்.

9.ஒரு விஷயம் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் உடனடி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

10.சிறந்த ஆலோசகரை தேர்ந்தெடுங்கள்

ஒவ்வொரு முக்கியமான விஷயத்திலும் அனுபவசாலிகளிடம் வாழ்க்கையில் அடிபட்டு கற்றறிந்தவர்களின் ஆலோசனையுடன் செயல்படுவது அவசியம். #Iniyavan

எவரையும் உடனடியாக நம்புவதற்குப் பதிலாக, அவர்களைப் பற்றிய தகவல் சேகரியுங்கள்.

11. உதவி செய்யும் போது விழிப்புடன் இருங்கள்

உதவி செய்வதற்கு முன்பு யாருக்குப் பயன் அளிக்கப் போகிறது என்பதை ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள் 

12.தியானம், யோகம் போன்றவை மனதை தெளிவாகவும் விழிப்புணர்வாகவும் வைத்திருக்க உதவும். அவ்வகையில் அனுதினமும் இவற்றை கடைபிடிப்பது சிறப்பு தரும்.

13.அனுதினமும் செய்தித்தாள்களில் வரக்கூடிய ஏமாற்ற சம்பவங்களை படித்து விழிப்புணர்வோடு செயல்படக்கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பிற மனிதரை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து விடும்...

14.குரு என்றாலே தனம்...பண விஷயங்களில் இவர்கள் ஏமாறுவதற்கான வாய்ப்புகளே பெரிய அளவில் அதிகம். ஆகவே பண விஷயங்களில் கறாறாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். #Iniyavan

இறுதியாக.....

குரு 1, 5, 9ஆம் பாவங்களில் இருப்பவர்கள் மிகுந்த நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இது அவர்களை ஏமாற்றம் அடையக்கூடியவர்களாக மாற்றும். அவர்கள் தங்களின் பெருந்தன்மையான குணத்தை  கட்டுப்படுத்தி, யாரை எப்படி நம்ப வேண்டும் என்பதில் அறிவுடன் செயல்பட்டால் மட்டுமே, வாழ்வில் ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.

வாழ்க்கையில் இவர்கள் பெறக்கூடிய  ஏமாற்றமான அனுபவங்களே இவர்களை எதிர்காலத்தில் எச்சரிக்கை உள்ளவர்களாக மாற்றும்...

நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ

https://t.me/Astrologytamiltricks

வியாழன், 6 மார்ச், 2025

செவ்வாய் தரும் தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகள்

தன பாவகத்தில் செவ்வாய் நின்று சுபர்களின் தொடர்பினைப் பெற்றால்.. (அ) ஆறு, பத்தாம் பாவகங்களுடன் செவ்வாய் தொடர்பு...

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் இரண்டாம் இடத்தில் (தனபாவகத்தில்) இருந்து சுப கிரகங்களின் தொடர்பு கிடைக்கும் பட்சத்தில்அந்த ஜாதகருக்கு பின்வரும் துறைகளில் இருந்து வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது:
இந்த நிலை இலக்னத்திற்கு இரண்டு மட்டுமின்றி, இலக்னாதிபதிக்கு இரண்டில் செவ்வாய் நின்று சுபகிரகங்களின் தொடர்பில் இருந்தாலும் பொருந்தும்.

1. நிலம், கட்டிடங்கள், சொத்து தொடர்பான தொழில்

செவ்வாய் பூமி மற்றும் கட்டுமானத்துடன் தொடர்புடையது.

ரியல் எஸ்டேட், வீடுகள், குடியிருப்புகள், கட்டடங்கள் வாங்கி விற்பனை செய்வது போன்றவை. நிலம் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பொருந்தும்...


2. காவல்துறை, பாதுகாப்புத் துறைகள், 

செவ்வாய் வீரத்திற்கு காரக கிரகம்; போலீஸ், ராணுவம், பாதுகாப்பு சேவைகள், மருத்துவம்  போன்ற துறைகளில் வாய்ப்பு கிடைக்கும்., சண்டை பயிற்சி, தற்காப்பு பயிற்சி நிலையங்கள் தொடர்பானவை

3. பொறியியல், தொழில்நுட்பம்

மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் என எந்த இன்ஜினியரிங் துறையும் செவ்வாயால் பலம் பெறும்.

தொழில்நுட்பம், மெஷின்கள், மெக்கானிக்கல் தொடர்பான தொழில்கள்.


4. விளையாட்டு, உடற்கல்வி, யோகம்

செவ்வாய் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை குறிக்கிறது.

விளையாட்டு வீரர், உடற்பயிற்சி பயிற்சியாளர், யோகா ஆசிரியர் ஆகிய துறைகள் லாபகரமானவை.


5. மருத்துவத் துறை, அறுவை சிகிச்சை

செவ்வாய் இரத்தத்தை, அறுவை சிகிச்சையை குறிக்கிறது.

மருத்துவர் (சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை), ஆயுர்வேதம், சித்த வைத்தியம் போன்றவை.


6. எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள், ஆயுதங்கள்

செவ்வாய் இயந்திரங்கள், ஆயுதங்கள், தொழில்துறை உற்பத்தி போன்றவற்றை குறிக்கிறது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆயுத உற்பத்தி, மெஷின்கள் உற்பத்தி, எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை.


7. செவ்வாய் நெருப்பிற்கு கரகம் கிரகம் என்பதால் நெருப்பு தொடர்புடைய தொழில்களும் இதில் அடங்கும்..

வேகமான உணவு (Hot Foods) & சமையல் தொடர்பான தொழில்கள்

ஹோட்டல், உணவகம், சமையல் காரகர்கள்

பேக்கரி, சாஸ், மசாலா பொருட்கள் உற்பத்தி


8.ரசாயனங்கள் மற்றும் மருந்துகள்

ரசாயன தொழில் (Chemical Industry)

பிளாஸ்டிக், வண்ணச்சாயம், பெயிண்ட் உற்பத்தி

மருந்துகள், ஆயுர்வேத தயாரிப்பு (அதிக சூடான மருந்துகள்)

(ஒருவருடைய வேலையை குறிப்பிடக்கூடிய ஆறாம்  பாவகத்துடனும், தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிப்பிடக்கூடிய பத்தாம் பாவகத்துடன் செவ்வாய் சுப கிரகங்களின் தொடர்பை பெற்று தொடர்பு கொண்டாலும் இது பொருந்தும்)

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/H9HNdLNl7g6AUdjsNbDRuT


https://t.me/Astrologytamiltricks

புதன் தரும் தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகள்

இலக்னத்திற்கு 2,6,10 புதன் – தொழில் & கல்வி வாய்ப்புகள்...

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2,6,10ஆம் இடத்தில், அல்லது லக்னாதிபதிக்கு 2,6,10ஆம்  இடத்தில் சுப கிரகங்களின் தொடர்பினை பெற்று நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் புத்திசாலித்தனம், வணிக நுணுக்கம், நல்ல தொடர்புத் திறன், கணக்கீட்டில் புலமை, & பகுத்தறிவுடன் முடிவெடுக்கும் திறன் இருக்கும். இதன் அடிப்படையில், அவர்களுக்கு சில தொழில்கள் & படிப்புகள் சிறப்பாக அமையும். #Iniyavan 
வேலை மற்றும் தொழிலை குறிப்பிடும் ஆறு பத்தாம் பாவகங்களுடன் வலுப்பெற்ற புதன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில்  கீழ்க்கண்ட தொழில்துறைகள் அதற்கேற்ற படிப்புகள்  அவருக்கு அமைய வாய்ப்புகள் உண்டு
---

தொழில்களில் வாய்ப்புகள்

புதன் வணிகம், கணக்கீடு, தகவல் தொடர்பு, & கல்வி ஆகியவற்றிற்கு காரக கிரகமாக இருப்பதால், இவர்களுக்கு கீழ்க்கண்ட தொழில்களில் வருமானம் இருக்க வாய்ப்பு உள்ளது:

1. கணக்கு & நிதி (Accounts & Finance)

அக்கவுண்டிங், புக்கீப்பிங், வங்கி & நிதி ஆலோசனை

ஷேர் மார்க்கெட் & இன்வெஸ்ட்மென்ட் துறைகள்

நிதி நிர்வாகம் (Financial Management)


2. வணிகம் & வர்த்தகம் (Business & Trade)

தகவல் தொடர்பு, வெளியீடு, எழுத்து, புத்தக வெளியீடு

டிஜிட்டல் மார்க்கெட்டிங், E-commerce வணிகம்

உதவி நிதி ஆலோசகர், Start-up Consultant


3. தகவல் தொழில்நுட்பம் (IT & Software)

மென்பொருள் அபிவிருத்தி, UX/UI டிசைன்

Data Science, Artificial Intelligence, Cyber Security

Web Development, Mobile App Development


4. பத்திரிகை & ஊடகம் (Journalism & Media)

பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி

Content Writing, Blogging, Copywriting

Public Relations (PR) & Corporate Communications


5. சட்டம் & மத்தியஸ்தம் (Law & Arbitration)

வழக்குரைஞர், சட்ட ஆலோசகர், Corporate Lawyer

மத்தியஸ்தம் & பேச்சு தொடர்பான பணிகள்

அரசியல், சமூகச் செயற்பாடு, அரசு நிர்வாகம்


6. கல்வி & பயிற்சி (Education & Training)

ஆசிரியர், கல்வி ஆலோசகர், Online Coaching

மொழிபெயர்ப்பு, இலக்கியம், பேச்சு பயிற்சி

மனையியல் அறிவியல், உடல்நலம் சார்ந்த ஆலோசனைகள் #Iniyavan

ஜோதிடம்,

---

இவர்கள் எது மாதிரியான படிப்புகளை தேர்வு செய்திருக்கலாம்?

இன்றைய காலகட்டத்தில் இவர்களுக்குப் பிடித்தமான படிப்புகள் பின்வருமாறு இருக்கலாம்:

1. கணக்கு & நிதி (Accounts & Finance)

B.Com, CA, CFA, MBA (Finance)

Stock Market, Investment Banking Courses


2. வணிக நிர்வாகம் & மேலாண்மை (Business & Management)

BBA, MBA (Marketing, HR, Operations)

Entrepreneurship & Digital Marketing


3. தகவல் தொழில்நுட்பம் (Information Technology)

B.Tech / B.Sc (Computer Science, IT)

Data Science, AI, Cyber Security

BCA, Software Development Courses


4. பத்திரிகை & ஊடகம் (Journalism & Mass Communication)

BJMC (Bachelor of Journalism & Mass Communication)

Content Writing, Blogging, Social Media Marketing


5. மொழிபெயர்ப்பு & இலக்கியம் (Linguistics & Literature)

B.A / M.A (English, Tamil, Other Languages)

Creative Writing & Translation Courses

இவ்விடத்தில் ராகுவின் நிலையும் பார்க்கப்பட வேண்டும்

6. சட்டம் & அரசு நிர்வாகம் (Law & Governance)

LLB, Corporate Law, Intellectual Property Law

Public Administration, Political Science



7. ஆசிரியராக & பயிற்சியாளராக (Teaching & Training)

B.Ed / M.Ed (Education, Psychology, Counseling)

Language & Speech Therapy Courses
இவ்விடத்தில் குருவின் தொடர்பு அவசியம்


8. சிறிய காலக்கெடுவில் முடிக்கக்கூடிய படிப்புகள்

Stock Market Trading

Digital Marketing & SEO

Graphic Designing & Animation

Foreign Languages (French, German, Spanish, etc.)

---
புதனுடைய வீடுகளில் நின்று ஒரு கிரகம் தசா புத்தி நடத்தினாலும் புதனுடன் இணைந்து ஒரு கிரகம் தசாபுத்தி நடத்தினாலும் இந்த பதிவு பொருந்தலாம்..
லக்னம் மட்டுமின்றி ராசியின் அடிப்படையில் இந்த பதிவு பொருந்தக்கூடும்.
ஜோதிடத்தில் புதன் என்னும் கிரகம் சர்வகலா வல்லவன் அவ்வகையில் சுய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருப்பபவர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை, தங்களின் நுண்ணறிவை & தொடர்புத் திறனை பயன்படுத்தி எந்த துறையிலும் வெற்றி பெறலாம்.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ

https://t.me/Astrologytamiltricks

புதன், 5 பிப்ரவரி, 2025

குருவும் புதனும் இணைந்திருந்தால் அல்லது குருவின் பார்வையில் புதன் இருந்தால்...

இயல்பிலேயே நல்ல ஞானத்தினையும், நல்லறிவையும் தரக்கூடிய கிரகமான குரு, ஒருவருடைய புத்திசாலித்தனம், சமயோசித புத்தி இவற்றிற்கு காரக கிரகமான  புதனைப் பார்த்தால் அல்லது புதனுடன் இணைந்திருந்தால் என்ன பலன்களை தரும் என்பதை பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம். #Iniyavan 

புத்திசாலித்தனத்திற்கு காரக கிரகமான புதனை, குரு பார்ப்பது அல்லது குருவும் புதனும் இணைந்திருப்பது இரு கிரகங்களின் காரக ரீதியாகவும் ஜாதகருக்கு சிறப்பான பலன்களை தரும்.

ஜாதகர் நல்ல தெய்வம், அனுக்கிரகம் பெற்றவராக கிருஷ்ணர், பெருமாள், மகாலட்சுமி போன்ற வழிபாடுகளில் விருப்பம் கொண்டவராக இருப்பார்.

ஜாதகருக்கு போதுமானவரை  தான் சார்ந்த எல்லா விஷயங்களிலும் நல்ல ஞானம் இருக்கும். தன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் மேம்பட்ட புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துபவராகவே ஜாதகர் இருப்பார்.#Iniyavan

இவருடைய புத்திசாலித்தனம் இவருக்கு மட்டுமின்றி இவரை சார்ந்த எல்லோருக்கும் பயன்படக்கூடிய காரணத்தினால் இருப்பதால் எல்லோருக்கும் நல்ல வழிகாட்டியாக, ஒரு குருவின் நிலையில் இருக்கக்கூடியவராக ஜாதகர் இருப்பார்.
எந்த ஒரு சிக்கலான விஷயத்திற்கும், இவரிடம் ஆலோசனை கேட்டால் சிறப்பான தீர்வை தருவார் என சுற்றியுள்ளவர்கள் சொல்லக்கூடிய அளவிற்கு ஜாதகருடைய புத்திசாலித்தனம் இருக்கும்.

ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு நல்ல ஈடுபாடு இருக்கும். ஜோதிடத்தில் நல்ல பரிட்சயம் இருக்கும்.இவருடைய உள்ளுணர்வு (Indution power) மிகச் சிறப்பான வகையில் ஆச்சர்யம் படும்படியான பலன் தரக்கூடியதாக இருக்கும்.

எதையும் ஆராய்ந்தரையும் திறன் பெற்றவராக ஜாதகர் இருப்பார். கல்விக்கு காரக கிரகமான புதனுடன் குரு இணையும் போது அல்லது புதனை, குரு பார்க்கும் போது ஜாதகர் கல்வி சார்ந்த விஷயங்களை நல்ல திறமை உடையவராக, ஒன்றிற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு படித்தவராக, சில நிலைகளில் முனைவர் பட்டம் வரை படித்தவராக இருக்க கூடும்.#Iniyavan

இவர்கள் இயல்பிலேயே நுட்பமான நிர்வாகத்திறனை பெற்றுள்ள காரணத்தினால், வேலை பார்க்கும் இடத்தில் பெரும்பாலும் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். அல்லது அந்த நிலைக்கு விரைவில் முன்னேறுவார்கள்.

புதன் எழுத்திற்கு காரக கிரகம் என்பதால் கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் நல்ல படைப்பாற்றல் இவர்களுக்கு உண்டு.சினிமா துறையில் இருக்கும் பொழுது நல்ல பாடல் ஆசிரியர்களாகவும், வசனகர்த்தாக்களாகவும் சிறந்து விளங்கும் தன்மை இவர்களிடத்தில் உண்டு.

Software, Communication, Technology, IT,   Media, News readers, செய்தி வடிவமைப்பாளர், Computer சார்ந்த துறைகள் போன்ற புதனுடைய காரகம் சார்ந்த தொழில்களில் இருக்கும் பொழுது மிகச் சிறப்பான முறையில் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.மேற்கண்ட துறைகளில் மற்றவர்களுக்கு  நன்கு போதிக்கக்கூடிய நிலையில் இருப்பவராகவும் இருக்கலாம்

குருவின் காரகமான Teaching துறையில் இருக்கும் போது எந்த ஒரு  Subject ஐயும் மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும்படி சொல்லித் தருபவராக, சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றவராக  ஜாதகர் இருப்பார். கல்வியின் காரகனான புதனுடன், குரு இணைந்திருப்பது அல்லது புதனை, குரு பார்ப்பது கல்வி சார்ந்த தொழில்களுக்கு பெரிய அளவில் நன்மை செய்யும். கல்வி நிறுவனங்களை பெரிய அளவில் நடத்தக்கூடிய வாய்ப்பையும் இந்த இணைவு ஏற்படுத்தித் தரும்.#Iniyavan

குருவின் காரகமான பனம் சார்ந்த விஷயங்களில் பணத்தை பெருக்குவதில் இவர்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கும். பங்குச்சந்தை, தங்கத்தில் முதலீடு (Digital Gold) போன்றவற்றில் ஜாதகர் விருப்பம் உடையவராக இருப்பார்.

எந்தத் துறையில் முதலீடு செய்தால் அதன் மதிப்பு உயரும் என்பதை அறிந்து நன்கு திட்டமிட்டு அதன்படி செயலாற்றுபவராக ஜாதகர் இருப்பார்.

பணத்திற்கு காரக கிரகமான குருவுடன், புத்திசாலித்தனத்திற்கு காரக கிரகமான புதன் இணைவதால் நிதி மேலாண்மையில் சிறப்பாக செயல்படக்கூடிய திறன்கள் இவர்களிடத்தில் உண்டு.
செலவுகளை குறைத்து வருமானத்தை பெருக்கும் வழி அறிந்தவர்கள். பண விஷயங்களில் இயல்பிலேயே சிக்கன குணத்தை பெற்றிருப்பார்கள்.
பணத்தை செலவு செய்வதில் நியாயமான விஷயங்கள் என்னும் பொழுது எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் அதற்காக செலவு செய்வார்கள். ஆனால் தேவையற்ற விஷயங்கள் எனும்போது செலவு ஒரு ரூபாய் என்றாலும் அதற்காக இவர்கள் அதிகம் யோசிப்பார்கள்.ஒவ்வொரு நாளுக்கான வரவு செலவுகளை எழுதி வைத்து, அதற்கு ஏற்ப தனது பொருளாதார நிலையை சீர் செய்து கொள்வதில் கவனமுடையவர்களாக இருப்பார்கள்.#Iniyavan

பிறப்பில் சாதாரண நிலையில் இருந்தாலும் தனது புத்திசாலித்தனத்தின் துணைகொண்டு பொருளாதார ரீதியாக பெரிய அளவிற்கு முன்னேறி விடுவார்கள். பெரும்பாலும் தான் இருக்கும் துறையில் நிபுணத்துவம்
(Specialist) நிறைந்தவர்களாக இருப்பார்கள்.இவர்களிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும்.

சில நிலைகளில் படிப்பறிவே இல்லாவிட்டாலும் கூட இருக்கும் துறையில் எல்லா நுணுக்கங்களையும் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம், இவர்களுக்கு தேடுதல்கள் அதிகம். தானாகவே எதையும் கற்றுக்கொள்வார்கள். கற்றுக் கொண்டதை பிறர் ஆச்சரியப்படும் படி போதிக்கக்கூடிய திறன்களையும் பெற்றிருப்பார்கள். நல்ல அனுபவ ஞானம் உடையவர்கள்.

நல்ல ஞாபக சக்தி உடையவர்கள் எளிதில் எதையும் மறக்க மாட்டார்கள்.
தொழில் ரீதியாக எடுத்துக் கொள்ளும் பொழுது பெரும்பாலும் உடலுழைப்பற்ற தன்னுடைய புத்திசாலித்தனத்தின் உதவி கொண்டு செய்யக்கூடிய தொழில்களிலேயே இருப்பார்கள்.

நட்பிற்கு காரக கிரகமான புதனுடன் முழு சுபரான குரு இணைவதால் பெரும்பாலும் இவர்கள் எல்லோருடன் நட்பாக பழகுவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பார்கள். நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக, நண்பர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுபவராகவும் ஜாதகர் இருப்பார். #Iniyavan

புதன் காதலுக்கு காரக கிரகம் என்பதால் எளிதில் காதல் வயப்படுவார்கள் காதல் சார்ந்த விஷயங்களில் மனவருத்தங்களை சந்தித்தவர்களும் உண்டு.

இளமைக்கு காரக கிரகமான புதனை முழு சுபரான குரு பார்ப்பதால் பெரும்பாலும் இளமையான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். வயதானாலும், வயதான தோற்றம் இவர்களுக்கு தெரிவதில்லை.பெரும்பாலும் மூக்கு அழகாக,எடுப்பாக  இருக்கும் ஏறு நெற்றி மற்றும் முன் வழுக்கை விழுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
நாடி ஜோதிடத்தில் குருவை மையமாக வைத்தே பலன் எடுப்பார்கள் அவ்வகையில் இளமைக்கு காரக கிரகமான புதனுடன் குரு இணைந்திருக்கும் பொழுது பெரும்பாலும் இவர்களே வீட்டில் கடைசி குழந்தைகளாக இருப்பார்கள்.#Iniyavan

புத்திரக் காரகனான குரு, புத்திசாலித்தனத்திற்கு காரண கிரகமான புதனுடன் இணைவதால் இவருடைய குழந்தைகளும் நல்ல புத்திசாலிகளாகவே இருப்பார்கள்.
இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை கேரளாவில், குழந்தை வடிவில் காட்சி தரும் குருவாயூர் கண்ணனை வழிபட்டு வருவது நலம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாலகிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட அனைத்து கிருஷ்ண ஆலயங்களிலும் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.#Iniyavan
தன்னுடைய மேம்பட்ட புத்திசாலித்தனம், அறிவாற்றலால் ஏற்படக்கூடிய வித்யா கர்வம் இன்றி நடந்து கொள்வதோடு,  பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு கல்வி ரீதியாக உதவுவது, அறியாமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல விஷயங்களை, நல்ல வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி அவர்களை கடைத்தேற்ற வழி செய்வது 
எல்லா நிலைகளிலும் இவர்களுக்கும் சரி   அவர்களுக்கும் ( அறியாமையின் காரணமாக நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தவர்கள்) நலத்தினை நல்கும்.

(பிற கிரகங்களின் பார்வைகள், தனிப்பட்ட முறையில் புதனுக்கும்,குருவுக்கும் கிடைத்துள்ள ஸ்தான பலம், வீடு கொடுத்த கிரகத்தின் நிலை இவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடக்கூடும்.)

நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ

https://t.me/Astrologytamiltricks

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுபவர்கள்



சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம், ஐந்தாம் பாவக அதிபதி நல்ல நிலையில் இருப்பது, ஐந்தாம் பாவகத்தோடு தொடர்பு கொண்ட கிரகங்கள் சுபகிரங்களாக இருக்கக்கூடிய பட்சத்தில் ஒருவர் ஒரு விஷயத்திற்காக திட்டமிட்டு திட்டத்தின் படியே செயலாற்றி வெற்றி பெறுவார். #Iniyavan 

எல்லோரிடத்திலும் திட்டமிட்டு செய்யக்கூடிய குணம் இருக்காது .ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருக்கும்போது மட்டுமே ஒருவர் திட்டமிட்டு செயலாற்றக்கூடிய மனதினை இயல்பாக கொண்டிருப்பார்.
மனதளவில் ஒரு விஷயத்தில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து அதற்கேற்றவாறு திட்டங்களை வகுத்து, அதனைப் பின்பற்றி செயலாற்றுவது  ஐந்தாம் பாவகத்தின் நிலையைப் பொருத்தது ஆகும்.

மனதளவில் எந்த ஒரு விஷயத்திற்கும் நீங்கள் தயாராக இருந்தால்தான் அதற்கான திட்டத்தினை மேற்கொள்வீர்கள். திட்டத்தின் படி செயலாற்றுவீர்கள். ஐந்தாம் பாவகம் ஆழ்மனதைக் குறிக்கும்.

ஒவ்வொரு நாள் காலையிலும், அல்லது ஒவ்வொரு நாளின் இரவிலோ மறுநாளுக்கான முக்கியமான செயல்கள் என்னவெஎன்று பட்டியலிட்டு அதன்படி மேற்கொள்பவர்களுக்கு ஐந்தாம் பாவகம் நிச்சயம் வலுப்பெற்று இருக்கும்.

ஐந்தாம் அதிபதி பலவீனமாக இருக்கும் பொழுதும் அல்லது ஐந்தாம் பாவகம் பாபர்கள் தொடர்பு பெற்று இருக்கும்போது குற்றச் செயல்களை செய்வதற்கு ஜாதகர் அஞ்சமாட்டார்.

சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருக்கும்போது ஒருவருக்கு இழிவான செயல்களை செய்வதற்கு பயப்படுவார்.தெரிந்தோ தெரியாமலோ, ஒரு குற்றச் செயலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அவருடைய மனசாட்சி இது தவறு, இதனால் உனக்கு பாதிப்பு வரும் என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கும்.#Iniyavan

ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருக்கும் போது ஜாதகர் தன்னுடைய பெயருக்கோ புகழுக்கோ எவ்வித பங்கமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு மனம் இயல்பாகவே தெளிவானதாக, தூய்மையாக இருக்கும். மனம் தெளிவடைந்து விட்டாலே எந்த விஷயத்திலும் பெரிய பிரச்சனை யாருக்கும் ஏற்படப் போவதில்லை.

ஐந்தாம் இடம் பாபர்களின் தொடர்பினை பெற்று, ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருக்கும் போது ஜாதகர் தவறான வழியில் சென்றாலும், பின்பு அதனால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து தன்னைத்தானே சீர் செய்து சரி செய்து கொள்வார்.
ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி மற்றும் மனோக்காரகனான  சந்திரன் முற்றிலுமாக பலமிழந்து இருக்கும்போது மட்டுமே ஒருவர் படுபாதக குற்றச்செயல்களில் ஈடுபட முடியும்.இலக்னத்திற்கு கிடைத்துள்ள சுபர் தொடர்பு, இலக்னாதிபதியின் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.#Iniyavan

இயற்கை பாபகிரகங்கள் ஐந்தாம் வீட்டு அதிபதியாகி ஆட்சி பெரும் பொழுது அவர்கள் சுபர்களின் தொடர்பினை பெற்றிருப்பது நல்லது. மேற்கொண்டு மற்றொரு பாபர் தொடர்பினை பெறாது இருப்பது நல்லது.

ஐந்தாம் பாவகம் சரி இல்லாத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

எண்ணங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.ஏனெனில் எண்ணங்கள்தான் செயல்களாகின்றன. ஒருவர் செய்வது சரியோ, தவறோ  அவருடைய எண்ணங்களை பொறுத்தே அவை செயல்களாகின்றன.இதை உணர்ந்தே முன்னோர் "எண்ணம் போல் வாழ்வு" என்பதை வகுத்துள்ளனர்.
 தன்னுடைய எண்ணங்களை செய்து சரி செய்து கொள்ள அனுதினமும்  குலதெய்வ வழிபாட்டையோ அல்லது இஷ்ட தெய்வ வழிபாட்டையோ கடைபிடிப்பது அவசியம்.#Iniyavan
பிறருக்கு உதவுதல், தர்ம செயல்களில் ஈடுபடுதல் போன்றவை மனதை தூய்மையாக்கும். இதன் மூலம் நல்ல குணங்களும், நற்பயன்களும் மனதில் உதயமாகும்.எகாதசி, பவுர்ணமி போன்ற நாட்களில் விரதம் இருந்து இறைவனைத் தியானிப்பது மனதின் தூய்மைக்கு உதவும்.நேர்மறை சிந்தனை வளர்க்கக்கூடிய புத்தகங்களை படித்தல்,நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடத்தில் நட்பினை உருவாக்கிக் கொள்ளுதல், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மேற்கொள்ளக்கூடிய நல்ல ஆன்மீக உரைகளை அவ்வப்போது கேட்டு வருதல் போன்றவை நலம் தரும்.இதுவரை  மனதளவில் தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்ற செயல்களை உணர்ந்து மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கோருதல் போன்றவை மனதை தூய்மையாக வைத்திருக்க உதவும்.மனம் தெளிவடைந்து விட்டாலே தெளிவான திட்டங்கள் தோன்றுவிடும். திட்டங்கள் படி செயலாற்றினால்  ஒரு கட்டத்தில் வெற்றி நிச்சயம்.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ

https://t.me/Astrologytamiltricks